சிவராத்திரி தினத்தில் வெளிநாட்டு குளத்தில் புனித நீராடிய அமலாபால்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,February 19 2023]

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அமலாபால் வெளிநாட்டில் உள்ள கோவில் ஒன்றில் சிவராத்திரி தினத்தில் புனித நீராடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பல நடிகர் நடிகைகள் சிவபெருமானை வழிபட்டு வருகிறார்கள் என்றும் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தமன்னா உள்பட பல நடிகைகள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சகோதரருடன் கர்நாடகாவில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி கொண்டாடினார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் நடிகை அமலா பால் இந்தோனேசியாவில் உள்ள சிவபெருமான் கோவிலில் உள்ள குளத்தில் புனித நீராடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களை அவர் பதிவு செய்து சில மணி நேரங்களை ஆன நிலையில் லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை அமலா பால் தனது தாயாருடன் பழனி கோயிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார் என்பதும் நெற்றியில் விபூதி குங்குமத்துடன் முழு ஆன்மீகவாதியாக மாறிய அமலாபாலின் புகைப்படங்கள் வைரலானது என்பது தெரிந்தது.