பாஞ்சாலிக்கு கூட 5 கணவர்கள் தான், எனக்கு 15 கணவர்கள்: அமலாபால்

  • IndiaGlitz, [Saturday,July 06 2019]

அமலாபால் நடித்த 'ஆடை' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது,. இந்த விழாவில் அமலாபால் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அமலாபால் பேசியதாவது.

எனக்கு சமீபகாலமாக வந்த கதைகள் எல்லாம் பெண்கள் குறித்த பொய்யான கதைகளே வந்தது. அதனால் ஒரு கட்டத்தில் நான் சினிமாவில் இருந்தே விலகிவிடலாம் என்று நினைத்தேன். அப்போதுதான் இயக்குனர் ரத்னகுமார் 'ஆடை' கதையை கூறினார். கதையை கேட்டதும் நான் முதலில் அவரிடம் கேட்ட கேள்வி, இந்த கதை எந்த ஆங்கில படத்திலாவது வந்துள்ளதா? என்பதுதான். ஆனால் அவர் இந்த கதை தனது சொந்தக்கதை என உறுதியாக கூறியபின்னரே நடிக்க சம்மதித்தேன்.

இந்த படத்தில் நிர்வாண காட்சி ஒன்றில் போல்டாக நடிக்க வேண்டும் என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும் அந்த காட்சியின் படப்பிடிப்பின்போது எனக்கு படபடப்பாக இருந்தது. ஆனால் படக்குழுவினர் எனக்கு முழு பாதுகாப்பு அளித்தனர். கேமிரா மற்றும் லைட்டிங் டீமில் உள்ள 15 பேர் தவிர அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பாஞ்சாலிக்கு கூட ஐந்து கணவர்கள் தான் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் எனக்கு இந்த 15 பேர்களும் கணவர்கள் போல தேவையான முழு பாதுகாப்பை அளித்தனர். இந்த அளவுக்கு அவர்கள் எனக்கு பாதுகாப்பு தரவில்லை என்றால் என்னால் அந்த காட்சியில் நடித்திருக்கவே முடியாது. இவ்வாறு அமலாபால் பேசினார்.

More News

'கைதி'யை அடுத்து முடிவுக்கு வந்த கார்த்தியின் அடுத்த படம்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

'அறம் 2' படத்தின் நாயகி நயன்தாராவா? சமந்தாவா?

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கம்பீரமான கலெக்டர் வேடத்தில் நடித்த நயன்தாராவுக்கு பாராட்டுக்கள்

சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த இரட்டையர்கள்

சூர்யாவின் 'என்.ஜி.கே' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிக்பாஸ் 3: இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த ஒருசில நாட்களிலேயே ரொமான்ஸ், சண்டை சச்சரவு என விறுவிறுப்பை தொடங்கிவிட்டது.

மகள் பாசத்தால் அழுத சாண்டி: முன்னாள் மனைவியும் கண்ணீர்

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஜாலியாக இருக்கும் ஒரே நபர் என்றால் அது நடன இயக்குனர் சாண்டிதான். இந்த நிலையில் நேற்று சாண்டியின் பிறந்த நாள் பிக்பாஸ் வீட்டில் கொண்டாடப்பட்டது.