2020 இல் நான் கற்றுக் கொணடவை… மனம் திறக்கும் முன்னணி நடிகை!!!

  • IndiaGlitz, [Thursday,December 31 2020]


 

தமிழின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலாபால். இவர் முன்னதாக இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். அடுத்து மும்பையில் பாடகர் ஒருவரோடு உறவில் இருக்கிறார் என்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விவகாரம் குறித்து கடந்த மாதம் அவதூறு வழக்கு ஒன்றையும் நடிகை அமலாபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.

இந்நிலையில் தற்போது 2020 இல் தான் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதில் “புதிதாக சில முடிவுகளையும் எடுத்து இருக்கிறேன். ஆன்மீக உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. தான் என்ற அகந்தை மறைந்து விட்டது. அந்த அகந்தையில் இருந்து விழித்து எழுந்து இருக்கிறேன். எனக்குள் இருக்கிற குண்டலினி சக்தியை எழுப்ப வாய்ப்பு கொடுத்தேன். எனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் கவுரவமாகவும் நன்றியோடும் ஏற்றுக்கொண்டேன்.

வருத்தம், வேதனை, கஷ்டம் போன்றவற்றில் இருந்து ஓடிப்போய்விட வேண்டும் என்று நினைத்தது இல்லை. அவற்றில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். பழைய சினேகிதர்களை சந்திக்க செல்ல வேண்டும். விரோதிகளை மன்னிக்க வேண்டும். நம்மை அறிந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் 2020 இல் நான் புதிதாக கற்றுக் கொண்ட பாடங்கள்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழில் இவர் “அதோ அந்த பறவை போல” “கடாவர்“ போன்ற படங்களை முடித்து இருக்கிறார். இந்நிலையில் யூ டர்ன் படத்தின் மூலம் கன்னடத்தில் புகழ்பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும் ஒரு வெப் சிரிஸின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அமலா பால் ஒப்பந்தமாகி இருக்கிறார். “குடி யெடமைதே“ எனும் பெயரில் எடுக்கப்பட்டு வரும் இந்த வெப் சீரிஸ் 8 பகுதிகளாக வரவிருக்கிறது. அதுதவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் ஆந்தாலஜி சீரிஸிலும் இவர் முதன்மை வேடத்தில் வரவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மாஸ்டருக்கும் ஈஸ்வரனுக்கும் வரவேற்பு கொடுங்க மக்களே: பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்பட்டும் போதிய பார்வையாளர்கள் வரவில்லை

ஆரியிடம் மனைவி கூறியது என்ன?

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் வெளியான வீடியோவில் ஆரியின் மனைவி மற்றும் குழந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.

தப்பா டைட்டில் போட்டு என் சோகத்துல காசு பாக்காதீங்க: அனிதா வேண்டுகோள்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அனிதாவின் தந்தையார் சம்பத் அவர்கள் சமீபத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் இந்த துயரத்தில் இருந்து மீள முடியாத அனிதா,

'டிப்'புன்னு என் வாயை தான் அடைச்சிட்டாங்களே: ஆஜித் குடும்பத்தினரிடம் புலம்பிய ஆரி!

பிக்பாஸ் வீட்டிற்கு ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் வெளியான அடுத்த புரமோவில் ஆஜித்தின்

2021 இல் குறிக்கோளே இதுதான்… பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தற்போது ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.