'சூர்யா 37' படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Friday,July 20 2018]

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் 'சூர்யா 37' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது

இந்த நிலையில் 'சூர்யா 37' படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரபல தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ், ஆர்யா, சமுத்திரக்கனி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் பொமன் இரானி ஆகிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அல்லுசிரிஷ் இந்த படத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: 'சூர்யா 37' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும் நான் நடித்து கொண்டிருக்கும் மற்றொரு படமான 'ஏபிசிடி' என்ற படத்தின் படப்பிடிப்பு தேதியும் ஒரே நேரத்தில் வருவதால் நான் 'சூர்யா 37' படத்தில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. என்னுடைய இந்த நிலையை இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களும் புரிந்து கொண்டார். இருப்பினும் எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு அளித்த சூர்யா, கே.வி.ஆனந்த், லைகா நிறுவனம் ஆகியோர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எதிர்காலத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று கூறியுள்ளார்.

More News

நான் என்ன இளிச்சவாயனா? ரம்யாவை வறுத்தெடுக்கும் சினேகன்

பிக்பாஸ் வீட்டின் ஒருசில மணி நேர விருந்தாளியாக சமீபத்தில் சென்று வந்தவர் சினேகன். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து இருந்தவர்

அட்வைஸ் பண்ண தகுதி வேண்டாமா? மகத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் ஒருவர் கூட பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை.

விஜய்சேதுபதி, த்ரிஷாவின் போட்டியை தவிர்த்த ஆர்யா

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிவாவின் 'தமிழ்ப்படம் 2' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில் இன்று 'போத' என்ற தமிழ்ப்படம் மட்டுமே ரிலீஸ் ஆகவுள்ளது.

நான் கார் ஓட்டிகிட்டே தாய்ப்பால் கொடுத்திருக்கேன்: அமெரிக்க மாடலுக்கு போட்டியாக தமிழ் நடிகை

சமீபத்தில் அமெரிக்காவின் மாடல் அழகி மாரா மார்ட்டின் என்பவர் தனது ஐந்து மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே ராம்ப்வாக் செய்தார்.

ஒரே தயாரிப்பாளருக்கு தொடர்ச்சியாக 4வது படத்தை இயக்கும் இயக்குனர்

பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்த 'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார்,