'புஷ்பா' புரமோஷன் விழாவில் தள்ளுமுள்ளு: ரசிகர்கள் காயமானது குறித்து அல்லு அர்ஜூன்!

  • IndiaGlitz, [Tuesday,December 14 2021]

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனின் ஒருபகுதியாக நாகார்ஜுனாவுக்கு சொந்தமான மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அல்லு அர்ஜுனை காண ஏராளமான ரசிகர்கள் வந்ததை அடுத்து அங்கு சலசலப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் ஒரு சில ரசிகர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’புஷ்பா’ புரமோஷன் விழாவை ரத்து செய்துவிட்டு அல்லு அர்ஜுன் வீடு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

இன்று நடந்த நிகழ்ச்சியில் எனது ரசிகர்கள் காயம் அடைந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து அறிந்தேன். எனது குழுவினர் தனிப்பட்ட முறையில் நிலைமையைக் கண்காணித்து, என்னிடம் தகவல் தெரிவித்து வருகின்றனர். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நான் மிகவும் கவனமாக இருப்பேன். உங்கள் அன்பும் அபிமானமும் எனது மிகப் பெரிய சொத்து, அவற்றை நான் ஒருபோதும் இழக்கப்போவதில்லை’ என்று கூறியுள்ளார்.

More News

'வலிமை' படத்தின் மாஸ் ஸ்டண்ட் வீடியோ: படக்குழுவினர் திட்டம்!

தல அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

கமல்ஹாசனை அடுத்து மேலும் ஒரு பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா!

உலகநாயகன் கமலஹாசன் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்த நிலையில் தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் கொரோனாவால்

கணவரை கொலை செய்ய முயன்ற புதுமணப்பெண் தற்கொலை: கூலிப்படையினர் கைது!

திருமணமான ஒரே மாதத்தில் கணவரை கூலிப்படையினர் மூலம் கொலை செய்ய முயன்ற புதுமணப் பெண் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பத்திரிகையாளர் வேடத்தில் பிரியா பவானிசங்கர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், கிஷோர், ஷிரிஷ்  நடிக்கும் 'பிளட் மணி'  (Blood Money) என்ற படம் ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலநிறத்தில் உலகின் மிகப்பெரிய ரத்தினக்கல்… வியந்துபோன பொதுமக்கள்!

இலங்கையில் உலகிலேயே மிகப்பெரிய ரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது