'புஷ்பா' தமிழில் நாளை ரிலீஸ் ஆகின்றதா? படக்குழுவினர் வெளியிட்ட தகவல்!

  • IndiaGlitz, [Thursday,December 16 2021]

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படம் நாளை தமிழில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தி சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை என்றும் ஆனால் படக்குழுவினர் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கு தீவிர முயற்சி செய்து வருவதாகவும் சரியான நேரத்தில் கிடைத்து விட்டால் நாளை தமிழில் ரிலீஸ் ஆகும் என்றும் இல்லையென்றால் காலதாமதமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் ’புஷ்பா’ படத்தின் தமிழ்ப்பதிப்பின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதாக படக்குழுவினர் அதிரடியாக அறிவித்து உள்ளனர். இதனை அடுத்து நாளை தமிழில் ’புஷ்பா’ ரிலீஸ் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ் தெலுங்கு தவிர மற்ற மொழிகளின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

கத்ரீனா - விக்கி திருமணத்திற்கு வந்த பரிசுப்பொருட்களின் மதிப்பு இத்தனை கோடியா?

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது என்பதும் பிரம்மாண்டமான முறையில் நடந்த இந்த திருமணத்தில்

அதேபோன்ற நிலைமை இப்போது ஏற்பட்டுவிடக்கூடாது: கமலுக்கு கோரிக்கை வைத்த ஜெயகாந்தன் மகள்!

'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற டைட்டிலுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கமல்ஹாசனிடம் இது குறித்து கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது

செலவு செய்த தொகை கிடைத்துவிட்டது: சமீபத்தில் வெளியான படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு!

சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தாங்கள் செலவு செய்த தொகை கிடைத்துவிட்டதாகவும் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'புஷ்பா' ரிலீசில் ஏற்பட்ட திடீர் சிக்கல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால்

சாரா அலிகானிடம் லட்சம் முறை சொல்லியும் கேட்க மாட்டேங்குறாங்க: தனுஷ்

நடிகை சாரா அலிகானிடம் லட்சம் முறை சொல்லியும் அவர் கேட்க மாட்டேன் என்கிறார் என திரைப்பட புரமோஷன் விழாவில் தனுஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.