பெட்ரோல்-டீசல் விலை சரியும்… உற்பத்தி குறித்து வெளியான அதிரடி தகவல்!

  • IndiaGlitz, [Monday,July 19 2021]

தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 2 மில்லியன் பேரல்கள் அளவில் உயர்த்த ஒபேக் நாடுகள் முடிவெடுத்து உள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் விலை சற்று சரிய வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் ஒபேக் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 10 மில்லியன் பேரல்கள் வரை குறைத்தன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. தட்டுப்பாடு காரணமாக விலை ஏற்றம் உருவானது.

அதிலும் இந்தியா போன்ற சில நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றில் விலை உயர்வு அதிகரித்து உள்ளன. இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டி இருக்கும்போது அதையொட்டி போக்குவரத்து மற்றும் காய்கறிகளின் விலையும் உயர்ந்து இருக்கிறது. இதனால் அத்யாவசியப் பொருட்களின் விலையில் கடும் மாற்றம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஒபேக் நாடுகளின் கூட்டமைப்பில் புதிய வரைமுறையைக் கொண்டு வந்துள்ளன. அதன்படி தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 2 மில்லியன் பேரல்கள் அளவு அதிகரிக்கத் திட்டமிட்டு இருக்கின்றன. இப்படி கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும்போது பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தில் மாற்றம் வரலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

மேலும் இந்த புதிய உற்பத்தி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஒபேக் கூட்டமைப்பு நாடுகள் தகவல் கூறப்பட்டு இருக்கிறது.

More News

3000 முத்தங்களுடன் ஸ்டாலின் புகைப்படம்.....! பாராட்டும் நெட்டிசன்கள்....!

முத்தங்களால் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புகைப்படத்தை வரைந்த மாணவருக்கு, இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பதும் கடந்த 1999ஆம் ஆண்டு 'உங்கள் தீர்ப்பு' என்ற நிகழ்ச்சியின்

மீனவர்கள் உயிரிழப்பை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்....! சீமான் அறிக்கை....!

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினத்தில் இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம் உள்ளது.

இப்போது புரிகிறதா? ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் டுவிட்!

அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக இன்று காலை வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் தாத்தாவாகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாக இருப்பதாக வெளிவந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி அவரது குடும்பத்தினரை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது