சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி!

சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நிபந்தனைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஹார்டுவேர் கடைகள், சிமெண்ட் கட்டுமான கடைகள், செல்போன் கடைகள் ஆகியவை தனிக்கடைகளாக இருந்தால் சமூக இடைவெளியை பின்பற்றி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்.

அதேபோல் கட்டுமானப்பொருட்கள் எடுத்துச் செல்ல தடை கிடையாது என்று தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ள சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று இல்லாத பகுதிகளில் கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் அக்கட்டுமான பணிகளுக்கு அனுமதி என அறிவித்துள்ளது.

மேலும் 25% பணியாளர்களுடன் பொருளாதார சிறப்பு மண்டலங்கள், ஏற்றுமதி நிறுவனம் செயல்படலாம் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏ.சி மெக்கானிக், தச்சர் ஆகியோர் அனுமதி பெற்று தொழில் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் 10% பணியாளர்களுடன் ஐ.டி.நிறுவனங்கள் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

More News

ஒரே தெருவில் நேற்று 19, இன்று 40: சென்னையில் கோரத்தாண்டவமாடும் கொரோனா

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியின் ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஒரு தகவல் உறுதி செய்த நிலையில் இன்று அதே தெருவில் 40 பேர் கொரோனாவால்

ராகவா லாரன்ஸ் உதவியால் கொரோனா பாதித்த பெண்ணுக்கு நடந்த பிரசவம்

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் 4 கோடிக்கு மேல் கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி அரிசிகள் உள்பட ஏராளமான பொருட்களையும் ஏழை எளிய மக்களுக்கு அவர் வழங்கி வருகிறார்

ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு

ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூடியது

எத்தனை கோடி கொடுத்தாலும் வேண்டாம்: தளபதி விஜய் உறுதி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 9ம் தேதியே ரிலீசாக வேண்டிய நிலையில் தற்போதைய கொரோனா பாதிப்பு காரணமாக

மீண்டும் முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்பால் பரபரப்பு

ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்காக சென்னை உள்பட 5 மாவட்டங்களில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது என்பதும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பால்,