இன்று முதல் அனைத்து வங்கிகளையும் மூட உத்தரவு: அதிரடி அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அனைத்து வங்கிகளையும் இன்று முதல் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து வங்கிகளுக்கு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும் இந்த அறிவுறுத்தலை வங்கி வாடிக்கையாளர்கள் சரியாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து வங்கிகளையும் மூட வேண்டும் என்று வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் அவர்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

ஆம்பூரில் ஏற்கனவே 13 பேர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று பரவியுள்ளதை அடுத்து இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆம்பூரில் தற்காலிக காய்கறி சந்தைகளும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் பள்ளி மைதானம் உள்பட 4 இடங்களில் செயல்பட்ட தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்பட்டு வந்த நிலையில் இந்த சந்தைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

More News

செல்ஃபி எடுக்க முயன்று 15 நிமிடம் உயிருக்கு போராடிய இளைஞர்!

ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க முயன்று பலர் உயிரை இழந்த சம்பவங்களை அடிக்கடி பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து

தமிழக அரசின் நடவடிக்கைகள் அருமை, அற்புதம், ஆனால்... ராகவா லாரன்ஸ் அறிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக தன்னார்வலர்கள் பலர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும்

முதல்முறையாக நண்பர்கள், உறவினர்கள் இல்லாத கொண்டாட்டம்: ரம்பா வெளியிட்ட வீடியோ

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்தவித கொண்டாட்டமும் இல்லாத நிலையே உள்ளது.

உங்கள் எஜமானருக்காக காத்திருக்கின்றீர்களா முதல்வரே? கமல்ஹாசன் கேள்வி

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து,

இன்று ஒரே நாளில் 106 கொரோனா பாசிட்டிவ்: தமிழகத்தில் 1000ஐ தாண்டியதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில் இன்று பேரதிர்ச்சியாக கொரோனாவுக்கு 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது