மறுபடியும் முதல்ல இருந்தா? பிக்பாஸ் வீட்டில் 16 பேர்

  • IndiaGlitz, [Friday,September 28 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் திட்டமிட்டபடி 100 நாட்களிலேயே முடித்திருக்கலாம். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்த சம்பவங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டது. நான்கு பேர்களை வைத்து ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியை நடத்த முடியாது என்பதால் தினமும் இருவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நிலையில் இன்றைய கடைசி நாளில் முதல் நாளில் இருந்த அனனவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டனர்.

ரித்விகாவிற்கு மிகப்பெரிய ஆதரவு மக்களிடம் இருப்பதாக வைஷ்ணவியும், எனக்கு ஓட்டு போடு என்று மகத்திடம் ஜனனியும் கூற ஒரே கொண்டாட்டமும் கும்மாளமும் ஆக பிக்பாஸ் வீடு இன்று உள்ளது.

இந்த நிலையில் இதுவரை ரித்விகாவிற்கு ஒரு கோடியே 22 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் குவிந்துள்ளதால் வரும் ஞாயிறு அன்று அவர் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெறுவது உறுதி என்றே தெரிகிறது.

More News

நிஜ சந்திரனை அவர்கள் பார்த்தது கிடையாது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கமல் பதில்

தமிழகத்தில் புதிது புதிதாக கட்சிகள் தோன்றுவதாகவும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல புதிய கட்சிகள் அதிகபட்சம் நான்கு அமாவாசைகள் தாண்டாது என்றும் சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருந்தார்

வனிதா விஜயகுமாருடன் நெருக்கம் குறித்து நடன இயக்குனர் ராபர்ட் விளக்கம்

கடந்த சில நாட்களாக நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் பங்களாவை வாடகை விட்ட விவகாரம் குறித்து பரபரப்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் உள்பட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சற்றுமுன்னர் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு

சபரிமலை கோவில் தீர்ப்பு குறித்து கமல், குஷ்பு கருத்து

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்ற அமர்வு இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருக்கிங்க: அனந்த் வைத்தியநாதன் கேட்ட கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் இன்னும் இரண்டு நாட்களில் நெருங்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட ரித்விகாதான் வின்னர் என்பது உறுதியாகியுள்ளது.