பிரபலத் தொழில் அதிபர் ஜாக் மா காணவில்லையா??? பரபரப்பு தகவல்!!!

  • IndiaGlitz, [Monday,January 04 2021]

 

பிரபலத் தொழில் அதிபரும், அலிபாபா நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா காணாமல் போய்விட்டார் என்ற பரபரப்பு தகவலை தற்போது ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இவர் தெற்காசியாவின் முதல் பணக்காரர் மற்றும் உலகப் பணக்காரர் வரிசையில் முன்னணியில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இவர் சீன அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துப் பதிவு செய்து இருந்தார். அதனால் அவர் தொழில் ரீதியாக அச்சுறுத்தப்பட்டார் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. கடந்த 2 மாதங்களாக அவர் பொதுவெளிக்கு வரவேயில்லை. அதனால் அவருக்கு அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல்கள் இருந்திருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தாக்கம் காரணமாக சீனாவில் தொழில் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாட்டு விதிகள் கொண்டு வரப்பட்டன. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடும் நட்டத்தைச் சந்திக்க வேண்டி வந்தது. இந்நிலையில் கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் பழமைவாதிகள். அரசாங்கம் காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்று ஜாக் மா கருத்து வெளியிட்டு இருந்தார். இந்த கருத்து சீன அரசாங்கத்திற்கு கடும் எரிச்சலை உண்டாக்கியதாகவும் அதனால் தொழில் ரீதியான நெருக்கடி கொடுக்கப்பட்டு அலிபாபா நிறுவனத்தின் மீது விசாரணை தொடரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணையில் அவரின் ஐ.பி.ஓ நிறுவனம் முடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்துவரும் ஜாக் மா கடந்த 2 மாதத்திற்கு முன்பு கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அலிபாபா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜாக் மாவிற்கு அச்சுறுத்தல்கள் இருந்திருக்கலாம். அதனால் பொது வெளிக்கு வருவதை ஜாக் மா தவிர்த்து இருக்கலாம் என்பது போன்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற ஒருவர் காணாமல் போய் இருப்பது உலகப் பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதனால் ஜாக் மா எங்கே என்பது போன்ற கேள்விகளை சமூக வலைத்தளங்களிலும் சிலர் தற்போது எழுப்பி வருகின்றனர்.

More News

முதல்வருக்கு நன்றி கூறி 'மாங்கல்யம் தந்துனானே' பாடிய சிம்பு!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஏற்கனவே தளபதி விஜய் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நிலையில்

உங்களை யாரு தியேட்டருக்கு போக சொன்னது? கஸ்தூரிக்கு குஷ்பு பதிலடி!

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் இன்று தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது

அவுட் ஆன ஆரி: இறுதி போட்டியில் நுழைந்த பாலாஜி?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இறுதிப்போட்டிக்கு ஒரு நபர் நுழைவதற்கான டாஸ்க் ஒன்று வைக்கப்படுகிறது.

நடைமுறைக்கு வந்த ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு திட்டம்… முதல்வரை வாழ்த்தும் மக்கள்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,5000 ரொக்கம் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

'பாரதி கண்ணம்மா' ரோஷினிக்கு மனநிலை மாறியதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வரும் ரோஷினிக்கு