'மீ டூ' பிரச்சனையால் படத்தில் இருந்து விலகிய '2.0' பட நடிகர்

  • IndiaGlitz, [Friday,October 12 2018]

உலகம் முழுவதும் 'மீ டூ' என்ற ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் உள்பட பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் 'தீராத விளையாட்டு பிள்ளை' நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். அதேபோல் இயக்குனர் சஜித்கான் மீது பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவரும் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்.

இந்த நிலையில் சஜித்கான் இயக்கத்தில் 'ஹவுஸ்புல் 4' என்ற படத்தில் நடிக்க '2.0' பட வில்லன் அக்சயகுமார் ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நானா படேகரும் நடிக்கவுள்ளர்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முன், நானா படேகர், சஜித்கான் ஆகிய இருவர் மீதும் 'மீ டூ' ஹேஷ்டேக் மூலம் பாலியல் குற்றச்சாட்டு இருந்ததால் இந்த படத்தில் இருந்து விலகி கொள்வதாக நடிகர் அக்சயகுமார் முடிவு செய்து அதனை படக்குழுவினர்களுக்கு தெரிவித்துள்ளார். அக்சயகுமாரின் இத்தனை ஆண்டு திரையுலக அனுபவத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விலகுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

 

More News

இத்தனை வருடம் மெளனமாக இருந்தது ஏன்? சின்மயி விளக்கம்

பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒருசிலர் சின்மயி இதனை விளம்பரத்திற்காக கூறுவதாகவும்,

வைரமுத்துவை சின்மயி திருமணத்திற்கு அழைத்தது ஏன்? பெண் பத்திரிகையாளர் விளக்கம்

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சின்மயியை நோக்கி ஒருசிலர் கேட்கும் கேள்விகள் இரண்டே இரண்டுதான். ஒன்று இத்தனை வருடங்களாக சின்மயி இந்த விஷயத்தை ஏன் வெளியே கூறவில்லை.

பத்திரிகையாளர்களுக்கு சின்மயி வேண்டுகோள்

பிரபல பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய விவகாரம் தமிழக திரையுலகை மட்டுமின்றி தேசிய அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.ஸ்டாலின், தினகரனுடன் கருணாஸ் சந்திப்பு

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையும் அவரது இல்லத்தில் கருணாஸ் சந்தித்து பேசியுள்ளார்

'சண்டக்கோழி 2': கீர்த்தி சுரேஷ் கேரக்டர் குறித்த அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை நோக்கி வேகமாக வளர்ந்து வரும் நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது தளபதி விஜய்யுடன் 'சர்கார்' மற்றும் விஷாலுடன் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.