பிரபல நடிகரின் கொரோனா தடுப்பு நிதியுதவி ரூ.30 கோடியாக உயர்வு!

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கினார் என்பது தெரிந்ததே. அதன்பின்னர் மும்பை மாநகராட்சியின் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்கினார். எனவே அவர் ரூ.28 கோடி நிதியுதவி செய்த நிலையில் தற்போது மேலும் ரூ.2 கோடி நிதியுதவி செய்துள்ளதால் அவருடைய மொத்த நிதியுதவி ரூ. 30 கோடியாக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பை போலீஸ் தலைமை காவலர்களான சந்திரகாந்த் பென்டூர்கர் மற்றும் சந்தீப் சர்வ் ஆகிய இருவர் மரணம் அடைந்தனர். மரணம் அடைந்த இந்த இருவருக்கும் வீரவணக்கம் செலுத்தியதோடு உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் மும்பை போலீஸ் பவுன்டேஷனுக்கு 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

அக்சயகுமாரின் இந்த உதவியை அடுத்து மும்பை போலீஸ் கமிஷனரான பரம்பீர் சிங் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நகரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் உயிரை காக்க நிச்சயம் உங்களின் பங்களிப்பு பயன்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

More News

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 'லட்சுமி பாம்' படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன

விஜயகாந்தின் ஒரே ஒரு போன்கால்: அந்தமான் மீனவர்களுக்கு போய் சேர்ந்த உதவிகள்

அந்தமானில் தமிழக மீனவர்கள் ஊரடங்கு காரணமாக உணவு உள்பட அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் இருப்பதை அறிந்து விஜயகாந்த் அவர்களுக்கு உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடை: தமிழக அரசின் அதிரடி முடிவு

கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக விலகலை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று சென்னையில் மிக அதிகமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளை மீண்டும் பால்கனி அரசுகள் என விமர்சித்த கமல்ஹாசன்!

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசை பால்கனி அரசு என விமர்சனம் செய்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன

இந்த அரசு சுத்த வேஸ்ட்: மீராமிதுன் பகீர் குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடனும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.