2.0 படத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை வரும். அக்சயகுமார் அதிர்ச்சி கருத்து

  • IndiaGlitz, [Tuesday,January 12 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் '2.0' இந்த படத்தின் வில்லன் கேரக்டருக்கு கமல்ஹாசன், விக்ரம், அமிதாப்பச்சன், அர்னால்டு உள்பட பல பிரபல நடிகர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் இறுதியில் பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்சயகுமார் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் அக்சயகுமாரை சந்தித்து '2.0' படத்தை பற்றி ஏதாவது கூறும்படி கேட்டபோது அதற்கு பதிலளித்த அக்சயகுமார், 'இந்த படத்தின் எந்த தகவலையும் தற்போது என்னால் கூற முடியாது. அப்படி ஏதாவது கூறினால் நான் இந்த படத்தில் இருந்து வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்படும். அதை நீங்கள் விரும்புகிறீர்களா? என்று எதிர்கேள்வி கேட்டு பத்திரிகையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடித்து வரும் '2.0' படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

More News

'பசங்க 2' படத்திற்கு பசங்களை அழைத்து செல்லும் பள்ளிகள்

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான 'பசங்க 2' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் ஆதரவால் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது....

'அரண்மனை'யின் உரிமையாளர் யார்? சுந்தர் சி விளக்கம்

கோலிவுட் இயக்குனர்களில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா இதுவரை....

காஜல் அகர்வாலை பின்பற்றும் ப்ரியாமணி

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்து வரும் 'சக்கரவியூகா' என்ற படத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் ஒரு பாடலை பாடி பாடகியாக அறிமுகமாகியுள்ளார் ....

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் அதர்வா

தேசிய விருது பெற்ற திரைப்படமான 'வெயில் படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் அதனையடுத்து சூப்பர் ஹிட் படமான 'அங்காடித்தெரு' மற்றும் 'அரவான்'...

குற்றப்பரம்பரை படத்திற்கு தயாராகிறார் பாலா

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 'குற்றப்பரம்பரை' கதையை படமாக்க முயற்சி செய்தார்....