close
Choose your channels

2.0 படப்பிடிப்பிற்காக சென்னை வந்த பிரபலம்

Sunday, February 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லைகா நிறுவனத்தின் மாபெரும் பட்ஜெட்டில் ஷங்கரின் பிரமாண்டமான இயகக்த்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் நடிகர் அக்ஷயகுமார் நேற்று சென்னைக்கு வந்துள்ளார்.

இந்த படத்தில் படப்பிடிப்பில் முதன்முதலாக அக்ஷயகுமார் கலந்துகொள்ள இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வில்லன் கேரக்டருக்கு அர்னால்டு, கமல், விக்ரம் உள்பட பலர் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் அக்சயகுமார் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் அக்சயகுமார் மோதும் ஆக்ரோஷமான காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக பலகோடி ரூபாய் செலவில் தனியார் தீம் பார்க் ஒன்றில் பிரமாண்டமான செட் தயாராக உள்ளது. ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிகுந்த பாதுகாப்புடன் விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment