சினிமா போதும்? திடீரென கிரிக்கெட்டில் களமிறங்கிய அஜித்.. யாருடன் விளையாடினார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,June 19 2024]

நடிகர் அஜித் தற்போது ஒரே நேரத்தில் ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் திடீரென அவர் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் ஜப்பானில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு முன்பாக அஜர்பைஜானில் நடைபெற இருக்கும் ’விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்றும் அங்கு அவர் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பின் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் மகிழ் திருமேனி இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் அஜித் தனது மகனுடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அஜித் மகன் ஏற்கனவே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் நிலையில் தற்போது அப்பாவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் கண்கொள்ளா காட்சியை ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

அஜித் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார் என்பதும், குறிப்பாக மகன் ஆத்விக் பள்ளி நிகழ்ச்சி அனைத்திற்கும் தவறாமல் கலந்து கொள்பவர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மகன் ஆத்விக் உடன் கிரிக்கெட் விளையாடும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'மகாராஜா' வெற்றிக்கு பின் பாதையை மாற்றிய விஜய் சேதுபதி.. தரமான இயக்குனருடன் கூட்டணி..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான 'மகாராஜா' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் இதுவரை 40 கோடிக்கும் அதிகமாக

8 வருடத்திற்கு முன் எப்படி இருந்திங்க.. இப்ப எப்படி இருக்கீங்க.. கீர்த்தி சுரேஷின் எமோஷனல் பதிவு..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எட்டு வருடங்களுக்கு முன் உங்களை நான் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது

யாருக்கும் தெரியாத சிறப்பான 2 கோவில் ரகசியங்கள் | வாஞ்சிநாத சுவாமி | மதுர காளியம்மன் | மங்களாம்பிகை

ஆன்மீக சிந்தனையாளர் கிண்டி சுவாமிநாதன் சிவாச்சாரியார் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கும்பகோணம் அருகில் உள்ள மங்களாம்பிகை உடனுறை வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில்

விஜய் நடிப்பதை நிறுத்தினால் சினிமாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது: நடிகை கஸ்தூரி

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் இன்னும் ஒரு படம் நடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

திமுக எம்பி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த டி இமானின் முன்னாள் மனைவி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அபார வெற்றி பெற்ற நிலையில் அவரது வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை