36 வயதில் கணக்கு டீச்சரை திருமணம் செய்து கொண்ட அஜித் பட வில்லன்.. ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Sunday,June 25 2023]

அஜித் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் 36 வயதில் கணக்கு டீச்சரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’வேதாளம்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து கலக்கியவர் கபீர் சிங் என்பது தெரிந்ததே.

’வேதாளம்’ படத்தின் வெற்றியை அடுத்து அவர் தமிழில் ’ரெக்க’, ‘காஞ்சனா 3’ ’அருவம்’ ’தெற்கத்தி வீரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 36 வயதான கபீர் சிங், கணக்கு டீச்சர் சீமா சாகல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹரியானாவில் நடந்த இந்த திருமணத்திற்கு இரு குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தனது திருமணம் குறித்து கருத்து கூறிய கபீர் சிங் ’கடவுளின் அருள் மற்றும் ரசிகர்கள் ஆசியால் இந்த திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் சீமாவுடன் தனது புதிய வாழ்க்கையை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

More News

'குக் வித் கோமாளி' சீசன் 4: முதல் நபராக ஃபைனலுக்கு தகுதி பெற்றவர் இவரா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் மற்ற சீசன்கள் போலவே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது

15 ஆண்டுக்கு பின் வெளியாகும் சூர்யாவின் சூப்பர் ஹிட் ரொமான்ஸ் படம்: ரசிகர்கள் குஷி..!

கடந்த 2008 ஆம் ஆண்டு சூர்யாவின் சூப்பர் ஹிட் ரொமான்ஸ் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ரிலீஸ் செய்யப்பட

'புரொஜக்ட் கே' படத்தில் இணைந்த கமல்ஹாசன்.. வரவேற்ற அகில இந்திய திரை பிரபலம்..!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'புரொஜக்ட் கே' என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும்

அண்ணி ஜோதிகாவின் வெறித்தனமான வொர்க்-அவுட் .. கார்த்தியின் கமெண்ட் என்ன தெரியுமா?

நடிகை ஜோதிகா கடந்த சில நாட்களுக்கு முன்னால் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த வீடியோவை பார்த்து பல திரை

தமிழ் சினிமாவில் பிரமாண்டத்தை அறிமுகம் செய்தவர்: கலைப்புலி எஸ் தாணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

 தமிழ் சினிமாவில் தற்போது பல திரைப்படங்கள் பிரம்மாண்டமாக உருவாகி வந்தாலும் பிரம்மாண்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் கலைப்புலி எஸ் தாணு தான் என்பது அனைவரும் அறிந்ததே.