தயாரிப்பாளரின் பணத்தை கோடிக்கணக்கில் மிச்சப்படுத்திய அஜித்-சிவா

  • IndiaGlitz, [Saturday,September 17 2016]

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் முடிவடிந்து அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர் என்பது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அஜித், சிவா ஆகியோர்களின் சிறப்பான ஒத்துழைப்பு காரணமாக தயாரிப்பாளரின் பலகோடி ரூபாய் பணம் மிச்சமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 32 நாட்களில் படப்பிடிப்பை இயக்குனர் சிவா முடித்துவிட்டார். இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்த ஸ்லோவானியா நாட்டில் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே இரவு என்றும் மீதி நேரம் முழுக்க பகல் என்றும் கூறப்படுகிறது.
இந்த வித்தியாசமான தட்பவெப்பத்தை அஜித்தின் ஒத்துழைப்போடு சரியாக பயன்படுத்தி அதிக நேரங்கள் படப்பிடிப்பை நடத்தி தயாரிப்பாளரின் பணத்தையும் விலை மதிப்பில்லா நேரத்தையும் சிவா மிச்சப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

More News

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகளும், 'கோச்சடையான்' இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்யவுள்ளதாக நேற்று முதல் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் பரவி வரும் நிலையில் இந்த செய்திகளுக்கு தனது சமூக வலைத்தளத்தின் மூலம் செளந்தர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மீண்டும் மோகன்லால் ரீமேக் படத்தில் கமல்ஹாசன்?

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து...

நயன்தாரா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முருகதாஸ்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் முதல்கட்ட...

செளந்தர்யா ரஜினியின் விவாகரத்து முடிவுக்கான காரணம்

கடந்த சில மணி நேரங்களாக கோலிவுட்டில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வலம் வருகிறது. அதாவது ரஜினியின் இளையமகள் செளந்தர்யா...

சசிகுமாரின் அடுத்த பட தலைப்பு மற்றும் முக்கிய விவரங்கள்

கிடாரி வெற்றி படத்தை அடுத்து சசிகுமார் நடித்து தயாரிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கவுள்ளார் என்பதை நேற்று பார்த்தோம்....