எத்தனை முறை கேட்டாலும் அஜித்தான் எனக்கு பிடித்த நடிகர்: ப்ரியா பவானிசங்கர்

  • IndiaGlitz, [Tuesday,December 19 2017]

தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமாகி பின்னர் சமீபத்தில் வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ப்ரியா பவானிசங்கர். இந்த படத்தின் வெற்றியால் தற்போது இவர் கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்

இந்த நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் அஜித் குறித்து இவர் பதிவு செய்துள்ள ஒரு டுவீட் டிரெண்டிங்கில் இணைந்துள்ளது. என்னிடம் பிடித்த நடிகர் யார்? என்று கேள்வியை பலர் கேட்கின்றனர். எத்தனை பேர் எத்தனை முறை கேட்டாலும் எனது ஒரே பதில் 'என்னை கவர்ந்த நடிகர் அஜித் மட்டுமே' என்று கூறி வருகிறேன். அஜித் தான் என்னுடைய ஃபேவரேட் மட்டுமின்றி பெஸ்ட் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஒரே ஒரு டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

மேலும் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் 'அஜித்தின் முகவரி படத்தை எத்தனை முறை பார்த்துள்ளேன் என்று எனக்கே தெரியாது. இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த படத்தை புதுசா பார்க்கின்ற மாதிரி பார்ப்பேன்' என்று கூறியுள்ளார்.

More News

உதயநிதிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்யும் உதவி

நடிகர் உதயநிதி நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் திரைப்படம் 'நிமிர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும்

நடிகை பாவனாவின் திருமண தேதி எது தெரியுமா?

நடிகை பாவனாவுக்கும், பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் டிசம்பர் 22ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் எளிமையாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது

எனக்கும் நடிப்புக்கும் சம்பந்தமே இல்லை: 'அருவி' அஞ்சலியின் அனுபவங்கள்

சமீபத்தில் வெளிவந்த 'அருவி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்திற்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உள்பட பிரபலங்கள் அனைவருமே பாராட்டு தெரிவித்துள்ளனர்

இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று உதயநிதியிடம் கூறினேன்: பிரியதர்ஷன்

உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் உள்பட பலர் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள படம் 'நிமிர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது

விபச்சாரம் செய்ததாக பிரபல நடிகை கைது

நடிகை ரிச்சா சக்சேனா ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருடன் பெங்காலி நடிகை ஒருவரும், தொலைக்காட்சி நடிகை ஒருவரும் கைது செய்யப்பட்டார்