'வலிமை' படத்தின் முக்கிய ஏரியாவை கைப்பற்றிய தயாரிப்பாளர்!

  • IndiaGlitz, [Tuesday,December 28 2021]

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரங்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலேயே பெரிய ஏரியாவான செங்கல்பட்டு ஏரியாவின் ’வலிமை’ படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் அவர்கள் பெற்றுள்ளார்

தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான இவர் நடித்த பிக்பாஸ் முகென் நடித்த ‘வேலன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தவர் என்பதும், இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ’இடிமுழக்கம்’ என்ற படத்தையும் இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிம்பு நடித்த ’மாநாடு’ படத்தின் படத்தை ரிலீஸ் செய்த அனுபவமுள்ள கலைமகன் முபாரக் அவர்கள் தற்போது ’வலிமை’ படத்தின் செங்கல்பட்டு ஏரியாவின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளார். தமிழகத்திலேயே செங்கல்பட்டு ஏரியாதான் மிகப்பெரியது என்பதும், ரோஹினி, காசி, மாயாஜால் உள்பட அதிக வருவாய் தரும் திரையரங்குகள் இந்த ஏரியாவில் தான் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு ஏரியாவில் கிடைக்கும் வசூலை வைத்துதான் ஒரு படத்தின் வெற்றியே நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ’வலிமை’ படத்தின் செங்கல்பட்டு ஏரியாவை தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் அவர்கள் பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

மேலும் இவர் தனது ஸ்கைமேன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் பிரபல நடிகர் ஒருவரின் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

More News

எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு உதயநிதி கொடுத்த உத்தரவாதம்!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று சென்னையில்

கொத்து கொத்தாகச் செத்துமடிந்த 5,000 பறவைகள்… இன்னொரு பேரழிவா?

இஸ்ரேல் நாட்டிலுள்ள ஹுலா எனும் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டு

நாயின் ஆணுறுப்பை வெட்டி, துண்டு துண்டாக்கிய சைக்கோ சம்பவம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில், தெருவில் சுற்றித்திரிந்த

120 மணிநேர ரெய்டில் 250 கோடி ரொக்கம்… இந்தியாவையே கதிகலங்க வைத்த தகவல்!

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த வியாபரி ஒருவரின் வீட்டில்

என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? ரசிகரின் கேள்விக்கு அஞ்சனாவின் கூல் பதில்!

தொலைக்காட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் அஞ்சனா ரங்கனிடம் ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு