அஜித்தின் 'துணிவு' பட வில்லன் நடிகர் திடீர் மரணம்.. மாரடைப்பால் காலமானார் என தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,February 20 2024]

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவான ’துணிவு’ திரைப்படத்தில் சுனில் தத்தா என்ற கேரக்டரில் நடித்த நடிகர் ரித்துராஜ் சிங் காலமானார். இதனை அடுத்து பாலிவுட் திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

பாலிவுட் நடிகரான ரித்துராஜ் சிங் ‘துணிவு’ திரைப்படத்தில் ஜான் கொக்கனுடன் இணைந்து வங்கி பணத்தை திருடுபவர்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பதும் அஜித்துக்கும் இவருக்கும் ஆக்ரோஷமான ஸ்டண்ட் காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்பதும் படம் பார்த்தவர்கள் தெரிந்ததே.

’துணிவு’ படம் மட்டுமின்றி சில பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் ஹிந்தி சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ரித்துராஜ் சிங் கடந்த சில நாட்களாக கணையம் அழற்சி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த ரித்துராஜ்சிங் அவர்களுக்கு வயது 59 என்பது குறிப்பிடத்தக்கது

More News

'வணங்கான்' படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகவல்..!

இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடித்த 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையத்தை கலக்கியது

மயில்சாமியின் கடைசி படம் உள்பட 8 படங்கள் ரிலீஸ்.. இந்த வார ரிலீஸ் விவரங்கள்..!

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி கடந்தாண்டு காலமான நிலையில் அவர் நடித்த கடைசி படம் உள்பட 8 திரைப்படங்கள் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியோட்டா மீடியா தயாரிக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

'இசை ஞானி' இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  

அரண்மனையை அடுத்து 3ஆம் பாகமாகும் இன்னொரு சுந்தர் சி படம்.. கவின் ஹீரோவா?

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' திரைப்படம் மூன்று பாகங்கள் ரிலீஸ் ஆகிய நிலையில் நான்காம் பாகம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் தெரிந்தது.

நிதி ஒதுக்கி, குழுக்கள் அமைத்தாலும் மேகதாதுவில் எந்த காலத்திலும் அணைக்கட்ட முடியாது: துரைமுருகன் திட்டவட்டம்

மேகதாதுவில் எந்த காலத்திலும் கர்நாடகா அணைக்கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.