மறைந்த ஜி மாரிமுத்துவின் குடும்பத்திற்கு அஜித் செய்த மிகப்பெரிய உதவி.. மறைவுக்கு பின் வெளியான தகவல்..!

  • IndiaGlitz, [Friday,September 08 2023]

தமிழ் திரை உலகம் மற்றும் சின்னத்திரை உலக குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து இன்று எதிர்பாராத வகையில் மாரடைப்பில் காலமானது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல திரையுலக பிரபலங்கள் இன்று அவரது இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜி மாரிமுத்துவின் சகோதரர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, ‘நாங்கள் மிகப்பெரிய குடும்பம், எங்கள் வீட்டு மொத்தம் எட்டு பேர் இருந்தோம் .

எனது சகோதரர் ஜி மாரிமுத்து அவர்கள் சின்ன வயதில் மிகவும் கஷ்டப்பட்டார், சாப்பாட்டுக்கு இல்லாத நிலையில் தான் இருந்தார். ஆனால் அதே நேரத்தில் திரை உலகில் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது, அவருக்கு நிறைய பேர் உதவி செய்தார்கள். எஸ்ஜே சூர்யா உட்பட ஒரு சிலர் போன் செய்தால் போதும், உடனே பணம் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்றும் கூறினார்.

மேலும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் பனிரெண்டாம் வகுப்பு வரை அஜித்குமார் தான் படிக்க வைத்தார். ’வாலி’ திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யாவிடம் உதவியாளராக மாரிமுத்து பணிபுரிந்தார் என்றும் அப்போது அஜித்துடன் நல்ல பழக்கப்பட ஏற்பட்டது என்றும் அந்த பழக்கத்தின் அடிப்படையில் தான் மாரிமுத்து குடும்பத்திற்கு அஜித் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள் என்று கூறினார்.

மறைந்த ஜி மாரிமுத்துவின் இரண்டு குழந்தைகளையும் அஜித் தான் படிக்க வைத்தார் என்பது யாருக்கும் தெரியாத ஆச்சரியமான தகவலாக உள்ளது.