close
Choose your channels

தளபதி விஜய் மகனின் நலம் குறித்து விசாரித்த தல அஜித்

Friday, April 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகிய இருவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தினந்தோறும் மோதிக் கொண்டாலும், விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரும் இன்றுவரை நட்புடன் உள்ளனர் என்பதும் இருவரும் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள் என்றும் இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அவர் தற்போது இந்தியாவுக்கு திரும்ப முடியாத சூழலில் உள்ளார். இதனால் கனடாவில் தனியாக இருக்கும் சஞ்சயை நினைத்து விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் கவலைப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது. இருப்பினும் விஜய்யின் மனைவி சங்கீதாவின் உறவினர்கள் கனடாவில் இருப்பதால் அவர்கள் சஞ்சய்யை நன்றாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும், எனவே சஞ்சய் பாதுகாப்பாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் கனடாவில் இருப்பது குறித்து செய்திகளின் மூலம் அறிந்த தல அஜித் உடனடியாக விஜய்க்கு போன் செய்த ’சஞ்சய் எப்படி இருக்கிறார்? கனடாவில் கொரோனா நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து விசாரித்தாராம். அதற்கு விஜய், ‘சஞ்சய் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவனுக்கு பயப்படும்படியாக எதுவும் இல்லை என்றும் அஜித்துக்கு பதிலளித்துள்ளார். இதனையடுத்து இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதாகவும் தெரிகிறது. விஜய் மகன் குறித்து அஜித் போனில் விசாரித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment