தளபதி விஜய் மகனின் நலம் குறித்து விசாரித்த தல அஜித்

தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகிய இருவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தினந்தோறும் மோதிக் கொண்டாலும், விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரும் இன்றுவரை நட்புடன் உள்ளனர் என்பதும் இருவரும் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள் என்றும் இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் தற்போது கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அவர் தற்போது இந்தியாவுக்கு திரும்ப முடியாத சூழலில் உள்ளார். இதனால் கனடாவில் தனியாக இருக்கும் சஞ்சயை நினைத்து விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் கவலைப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது. இருப்பினும் விஜய்யின் மனைவி சங்கீதாவின் உறவினர்கள் கனடாவில் இருப்பதால் அவர்கள் சஞ்சய்யை நன்றாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும், எனவே சஞ்சய் பாதுகாப்பாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் கனடாவில் இருப்பது குறித்து செய்திகளின் மூலம் அறிந்த தல அஜித் உடனடியாக விஜய்க்கு போன் செய்த ’சஞ்சய் எப்படி இருக்கிறார்? கனடாவில் கொரோனா நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து விசாரித்தாராம். அதற்கு விஜய், ‘சஞ்சய் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவனுக்கு பயப்படும்படியாக எதுவும் இல்லை என்றும் அஜித்துக்கு பதிலளித்துள்ளார். இதனையடுத்து இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதாகவும் தெரிகிறது. விஜய் மகன் குறித்து அஜித் போனில் விசாரித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது

More News

கொரோனா அச்சம் எதிரொலி: சாலையில் இருந்த பணத்தை கண்டுகொள்ளாத பொதுமக்கள்

சாலையில் 10 ரூபாய் இருந்தாலே ஓடோடிச் சென்று எடுக்கும் பொதுமக்கள் தற்போது ஆயிரக்கணக்கில் சாலையில் பணம் இருந்தும் அதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த அதிசய சம்பவம்

ரசிகரின் வேண்டுகோளை ஏற்று டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

கொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஊரடங்கிற்கு பின் இதை முக்கியமாக கவனியுங்கள்: யோகிபாபு அறிவுரை

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர்

ஊரடங்கு உத்தரவால் ஊருக்குள் வரும் காட்டு விலங்குகள்: செங்கல்பட்டு பகுதியில் பதட்டம்

காட்டு விலங்குகள் வாழும் பகுதியை மனிதன் ஆக்கிரமித்த நிலையில் தற்போது இந்த நிலைமை தலைகீழாகி ஊருக்குள் காட்டு விலங்குகள் வலம் வரத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகை காஜல் அகர்வால் செய்த மிகப்பெரிய நிதியுதவி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்களுக்கு, நலிந்த நடிகர்களுக்கு என பல்வேறு தரப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது