காவிரிக்காக ஒன்று சேர்ந்த அஜித்-விஜய் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் அதில் ஒரு சோகம் என்னவெனில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நாளில் , ஒவ்வொரு விதத்தில் போராட்டம் செய்து வருவதால் போராட்டம் வலிமையற்றதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அரசியல்வாதிகள் செய்யும் இந்த தவறை அஜித்-விஜய் ரசிகர்கள் செய்யவில்லை. சமூக வலைத்தளங்களில் என்னதான் கருத்துவேறுபாடுடன் மோதிக்கொண்டாலும் காவிரி பிரச்சனைக்காக ஒன்றாக கைகோர்த்து அஜித், விஜய் ரசிகர்கள் தமிழக மக்களின் நலனுக்காக போராட்ட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று சிதம்பரத்தில் அஜித், விஜய், தனுஷ் உள்பட முக்கிய நடிகர்களின் ரசிகர்கள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் காவிரிக்காக ஒற்றுமையாக குரல் கொடுத்து வருகின்றனர். இதேபோல் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையுடன் போராட்டம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More News

விஜய் எப்பொழுது அரசியலில் ஈடுபடுவார் ? எஸ்.ஏ.சி

தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் சமூக  வலைத்தளங்கள் மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு தந்தையாக விஜய் அரசியலுக்கு வரவேண்டும்

'இது அன்பால சேர்ந்த கூட்டம், அழிக்க முடியாது: சிஎஸ்கே வீரரின் தமிழ் டுவீட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துவிட்டாலே தன்னாலே தமிழ் உணர்வும், தமிழ் டுவீட்டும் வீரர்களிடையே வந்துவிடும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

200 தொகுதிகளில் நடிகர்கள் கட்சி வெற்றி பெறும்: எஸ்.ஏ.சந்திரசேகர்

அனைத்து நடிகர்களும் ஒன்றிணைந்து ஒரு கட்சியை ஆரம்பித்தால், அந்த கட்சி உறுதியாக 200 தொகுதிகளை கைப்பற்றும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

ரன்வீர்சிங், அனுஷ்கா ஷர்மாவுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளில் குழப்பம்

பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்த ரன்வீர்சிங்கிற்கு தாதா சாகிப் பால்கே எக்ஸலன்ஸ் என்ற விருதினை தனியார் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் பாம்புகள்: வேல்முருகன் திடுக்கிடும் தகவல்

மலைவாழ் மக்கள் நூற்றுக்கணக்கான நாகப்பாம்புகளை மலையில் இருந்து பிடித்து வந்து சேப்பாக்கம் மைதானத்தில் விட திட்டமிட்டுள்ளதாக வேல்முருகன் கூறியுள்ளார்.