அஜித்தை சந்தித்த சிரஞ்சீவி.. அஜித்துக்காக இதையெல்லாம் செய்தாரா? ஷாலினி குறித்தும் பதிவு..!

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதன் அருகே சிரஞ்சீவியின் ’விஸ்வாம்பரா’ படப்பிடிப்பு நடந்த நிலையில் அஜித் திடீரென அங்கு சென்றதாகவும் இதனை அடுத்து சிரஞ்சீவி - அஜித் சந்திப்பு நடந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த சந்திப்பு குறித்து சிரஞ்சீவி புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து அஜித்தின் முதல் படம் மற்றும் ஷாலினி தன்னுடன் நடித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.

அஜித் தெலுங்கில் நடித்த முதல் படமான ’பிரேமா புஸ்டகம்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் கலந்துகொண்டதாக சிரஞ்சீவி அந்த பதிவில் பகிர்ந்து உள்ளார். மேலும் அஜித்தின் மனைவி ஷாலினி தனது படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததையும் அவர் நினைவு கூர்ந்து உள்ளார்.

அஜித் அவர்களை சந்தித்தது தனது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவருடன் அரட்டை அடித்தது மறக்க முடியாத நினைவுகள் என்றும் தெரிவித்த சிரஞ்சீவி அஜித்திடம் ஏராளமாக விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்று கூறியுள்ளார். மேலும் பல ஆண்டுகளாக அஜித் அடைந்திருக்கும் நட்சத்திர அந்தஸ்தை நான் ஒவ்வொரு நாளும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் அவர் என் இதயத்தில் ஒரு அழகான இடத்தை பிடித்துள்ளார் என்றும் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். சிரஞ்சீவியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.