ஆரம்பித்த இடத்திலேயே முடிந்தது..'லால் சலாம்' படப்பிடிப்பு குறித்து ஐஸ்வர்யா ரஜினியின் நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Monday,August 07 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய இடத்திலேயே முடிந்தது என நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்த ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

திருவண்ணாமலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இன்று மீண்டும் திருவண்ணாமலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளதாவது:

கடந்த நான்கு மாதங்களாக எங்கள் குழுவினர் மிகவும் கடினமாக உழைத்து இந்த படப்பிடிப்பை முடித்துள்ளோம். குறிப்பாக கடைசி 22 மணி நேரங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நிறுத்தி உள்ளோம். என்னுடைய ’லால் சலாம்’ குடும்பத்திற்கு எனது நன்றி.
திருவண்ணாமலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி அதே இடத்தில் முடிவடைந்தது என்பது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. எல்லாம் உங்கள் ஆசியால்தான். ’லால் சலாம்’ படத்தின் அடுத்த கட்ட பணிக்கு நாங்கள் செல்கிறோம் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஜெயிலர்' படம் குறித்து தனுஷ் ட்வீட்.. ரசிகர்களின் ரியாக்ஷன்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமந்தாவின் அடுத்த படம்.. சூப்பர் அப்டேட் தந்த படக்குழு..!

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டாலும் அவர் ஏற்கனவே நடித்து முடித்துள்ள 'குஷி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது.

39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷா.. எப்படி ஒப்புக்கொண்டார்?

முன்னணி நடிகைகள் சிறு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பதற்கு கூட யோசிக்கும் நிலையில் 39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்க நடிகை த்ரிஷா ஒப்புக்கொண்டது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  

'கிழக்கு வாசல்' என்ற புத்தம் புதிய தொடர்.. திங்கள் முதல் வெள்ளி வரை ஸ்டார் விஜய்யில்..

 ஸ்டார் விஜய் சேனலில் 'கிழக்கு வாசல்' என்ற புத்தம் புதிய மெகா தொடர் இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 7 முதல் ஸ்டார் விஜய் சேனலில் திங்கள் முதல் வெள்ளி

கவின் அடுத்த படத்தில் 2 இளம் நாயகிகள்.. டைட்டில் இதுதானா?

நடிகர் கவின் நடித்த 'டாடா' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தை இயக்குனர் இளன் இயக்கி வருகிறார்