ஆறாது சினம்' படத்தில் ஏழு நாள் மட்டுமே நடித்த ஹீரோயின்

  • IndiaGlitz, [Sunday,February 21 2016]

அருள்நிதி நடிப்பில் 'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆறாவது சினம்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படம் குறித்து நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


'காக்கா முட்டை' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மா எனும் கேரக்டரில் நடித்துள்ளதாகவும், இந்த படத்தில் தனக்கு ஹோம்லியான கேரக்டர் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்முதலாக போலீஸ் அதிகாரிக்கு மனைவியாக நடித்துள்ளதாகவும், இந்த படத்தில் தான் ஒரு புதிய தோற்றத்தில் தோன்றுவதாகவும், இதற்கு காரணமான இயக்குனர் அறிவழகன் மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் தன்னுடைய பகுதி மிகவும் குறைவானது என்றும் இந்த படத்திற்காக தான் ஏழுநாள் மட்டுமே நடித்திருப்பதாகவும் ஆனாலும் தன்னுடைய கேரக்டர் படத்தின் கதைக்கு முக்கியமானதாக இருக்கின்றது என்பதால் தனக்கு முழுதிருப்தி என்றும் தெரிவித்துள்ளார்

More News

பொதுமக்களுக்கு விஷால் கட்டிக்கொடுத்த 5 கழிப்பிடங்கள்

நடிகர் விஷால் நடித்து வரும் 'மருது' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இராஜபாளையம் பகுதியில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

ரிலீஸூக்கு முன்பே ஜீவா படத்தை பார்த்த 50 பேர்

ஜீவா, ஹன்சிகா, சிபி நடித்த 'போக்கிரி ராஜா' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள நிலையில் இந்த ...

'முத்து'க்கு பின் 'கபாலி'க்கு கிடைத்த பெருமை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம்தான் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றது. இதேபோல்...

அஜித்தை பார்த்தவுடன் 2 நாட்களுக்கு எனக்கு நடிப்பே வரவில்லை : சூரி

கோலிவுட் திரையுலகினர் அஜித்தை ஒரு நடிகராக மட்டும் யாரும் பார்ப்பதில்லை. அவரை ஒரு நல்ல மனிதராக பிரமிப்புடன் அனைவரும் பார்த்து வருவது தெரிந்ததே...

ரஜினிகாந்த் படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி

மம்முட்டி, நயன்தாரா நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர்...