ஆறாது சினம்' படத்தில் ஏழு நாள் மட்டுமே நடித்த ஹீரோயின்

  • IndiaGlitz, [Sunday,February 21 2016]

அருள்நிதி நடிப்பில் 'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆறாவது சினம்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படம் குறித்து நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


'காக்கா முட்டை' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மா எனும் கேரக்டரில் நடித்துள்ளதாகவும், இந்த படத்தில் தனக்கு ஹோம்லியான கேரக்டர் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்முதலாக போலீஸ் அதிகாரிக்கு மனைவியாக நடித்துள்ளதாகவும், இந்த படத்தில் தான் ஒரு புதிய தோற்றத்தில் தோன்றுவதாகவும், இதற்கு காரணமான இயக்குனர் அறிவழகன் மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் தன்னுடைய பகுதி மிகவும் குறைவானது என்றும் இந்த படத்திற்காக தான் ஏழுநாள் மட்டுமே நடித்திருப்பதாகவும் ஆனாலும் தன்னுடைய கேரக்டர் படத்தின் கதைக்கு முக்கியமானதாக இருக்கின்றது என்பதால் தனக்கு முழுதிருப்தி என்றும் தெரிவித்துள்ளார்