ஐஸ்வர்யாராயின் 'ரக்சாபந்தன்' வாழ்த்து புகைப்படத்தில் நெட்டிசன்கள் கண்டுபிடித்தது என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,August 22 2021]

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ரக்சாபந்தன்’ வாழ்த்து தெரிவித்து 2 புகைப்படங்கள் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் உள்ள ஒரு சில விஷயங்களை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மணிரத்தினம் இயக்கிய ’இருவர்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யாராய் அதன் பின்னர் ’ஜீன்ஸ்’ ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ’எந்திரன்’ ’ராவணன்’ போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ’பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யாராய் எப்போதாவது பதிவுகள் செய்யும் நிலையில் தற்போது ‘ரக்சாபந்தனை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் கையில் கட்டியுள்ள வாட்ச் குறித்த ஆராய்ச்சியில் நெட்டிசன்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் அவர் கட்டியுள்ள வாட்ச் உலக அளவில் பிரபலமான ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு என்பதும், இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக பல ஆண்டுகளாக ஐஸ்வர்யா ராய் இருந்து வருவதாகவும், ‘ரக்சாபந்தன்’ வாழ்த்து கூறுவது போல் தான் விளம்பர தூதுவராக இருக்கும் நிறுவனத்தின் வாட்சையும் அவர் விளம்பரப்படுத்தி உள்ளதாகவும் நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த வாட்சின் விலை ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் என்றும் நெட்டிசன்கள் கண்டுபிடித்த தகவல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

3 நடிகர்கள், 3 நடிகைகள், ஒரு நடன இயக்குனர், ஒரு ஆங்கர்: சர்வைவர் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்! 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக 'சர்வைவர்' என்ற புதிய நிகழ்ச்சி விரைவில் ஜீ டிவியில் ஆரம்பமாகப் போகிறது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள்

பிரபல தயாரிப்பாளர் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூஜா ஹெக்டே!

பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மறைவு செய்தியைக் கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

நாளை முதல் தியேட்டர்கள் திறப்பு: என்னென்ன படங்கள் ரிலீஸாகும்?

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் திறக்காமல் இருந்த நிலையில் நாளை முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

குழந்தையின் புகைப்படங்களை முதல்முறையாக வெளியிட்ட மகத்!

நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மகத் பிரபல மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது .

நடிகை ஷெரினுக்கு கொரோனா என்பது பொய்யான தகவலா? 

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஷெரின் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது என்பதும் இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம்