டெல்லி ஐகோர்ட்டில் ஐஸ்வர்யாராய் மகள் போட்ட வழக்கு: கண்டித்த நீதிமன்றம்..!

  • IndiaGlitz, [Thursday,April 20 2023]

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2011 ஆம் ஆண்டு ஆராத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆராத்யாவுக்கு தற்போது 12 வயதாகும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து ஒரு சில யூடியூப் சேனல்களில் அவதூறு செய்திகளை பரப்பி வரப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து 10 யூடியூப் சேனல்கள் மீது ஆராத்யா டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தனது உடல்நிலை குறித்து தவறான நோக்கத்துடன் வதந்தியை பரப்பி இருப்பதாகவும் இந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்றும் ஆராத்யா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிசங்கர் அவர்கள் யூடியூப் சேனல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். ‘சாமானியரின் குழந்தையோ அல்லது நட்சத்திரங்களின் குழந்தையோ ஒவ்வொரு குழந்தையையும் மாண்புடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்றும் அதை பெற அவர்களுக்கு தகுதி உண்டு என்றும் ஒரு குழந்தையின் உடல் நலம், மனநலம் பற்றி தவறான தகவல்களை பரப்புவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பள்ளி செல்லும் குழந்தைகள் மீது விஷமத்தை பரப்புவது தவறானது என்று கூறிய நீதிபதி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.