போன வருடம் பரதம், இந்த வருடம் பாட்டு: ஐஸ்வர்யா தனுஷ்

  • IndiaGlitz, [Saturday,March 10 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் பல்திறமை கொண்டவர் என்பது தெரிந்ததே. குடும்பம், குழந்தைகளை கவனித்து கொண்டே அவர் திரைப்படம் இயக்குவது உள்பட பல்வேறு கலைப்பணிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு உலக மகளிர் தினத்தன்று ஐக்கிய நாட்டு சபையில், ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் இதன்மூலம் பெற்றார். அதேசமயம் அவருடைய நடனம் சமூக வலைத்தளங்களால் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வருட மகளிர் தினத்தில் பரதம் ஆடிய ஐஸ்வர்யா, இந்த வருட மகளிர் தின ஸ்பெஷலாக பாடல் ஒன்றை பாடியுள்ளார். இளையராஜாவின் மகளும், யுவன்ஷங்கர் சகோதரியுமான பவதாரிணி இசையில் உருவான மகளிர் தின பாடலை ஐஸ்வர்யா தனுஷ் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு சமூக வலைத்தள பயனாளிகளின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

நயன்தாராவுடன் டான்ஸ் ஆடிய நடிகரை பார்த்து ஆத்திரமடைந்த விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' படத்தி நடித்திருந்த ராகுல் தாத்தா நடிப்பில் பின்னி பெடலெடுத்திருப்பார் என்பது தெரிந்ததே.

ஜோதிகாவை புகழ்ந்த காமெடி நடிகருக்கு நன்றி கூறிய சூர்யா

நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகியிருந்த நிலையில் '36 வயதினிலே' படத்தின் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்

ஆன்மீக சுவாமி மலையாறிவிட்டார்: ரஜினியை கிண்டல் செய்த அமைச்சர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் காலா' மற்றும் '2.0' படப்பிடிப்பு காரணமாக அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இமயமலை செல்லவில்லை

விஜய்யிடம் வாழ்த்து பெற்ற நட்சத்திர ஜோடி

நேற்று கீர்த்தனா, அக்சய் தம்பதிகளை நேரில் சந்தித்து தளபதி விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

'உன்னை நினைத்து' படத்தை ஞாபகப்படுத்தும் அஸ்வினி-அழகேசன் காதல்

சென்னையில் நேற்று மாலை கல்லூரி மாணவி அஸ்வினி, அழகேசன் என்ற வாலிபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது