close
Choose your channels

சில விஷயங்கள் மாறுவதே இல்லை: மகன்கள் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவு...!

Thursday, September 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில விஷயங்கள் மாறுவதே இல்லை என தனது மகன்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்குனர் என்பதும் சமீபத்தில் இவரது இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் மீண்டும் ஒரு வெற்றி படத்தை தர அடுத்த படத்திற்காக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் ’இதுவே முதல் நாள் பள்ளிக்கு செல்லும் புகைப்படங்களில் கனமான ஒன்று’ என ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த புகைப்படத்தை குறிப்பிட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’மழலை பள்ளி அல்லது உயர்நிலைப்பள்ளி, எதுவாக இருந்தாலும் இதே கதை தான். என் மகன்கள் இப்போதும் பொம்மைகளுடன் விளையாடுகின்றனர். சில விஷயங்கள் மாறுவதே இல்லை. இந்த கேரக்டர்கள் உணர்ச்சிபூர்வமானவை’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment