ஐஸ்வர்யா ராஜேஷின் காமெடி படம்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

  • IndiaGlitz, [Friday,November 03 2023]

துவார்கா புரடொக்சன்ஸ் தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் கலக்கலான காமெடி படமாக உருவாகும் புதிய திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது.

இப்படத்தின் பூஜை, திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

டார்லிங், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி படங்களில், திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய ரா.சவரி முத்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்துச் சிரிக்கும் ஒரு அருமையான படைப்பாக இருக்கும்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

More News

'ஜவான்' உள்பட 5 தமிழ்ப்படங்கள்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..!

ஷாருக்கான் நடித்த 'ஜவான்' உள்பட இந்த வாரம் 5 தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.  

பெண் போட்டியாளரை ஜெயிலுக்கு அனுப்பிய கேப்டன் பூர்ணிமா.. பிரதீப் எப்படி தப்பித்தார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர் இன்று ஜெயிலுக்கு அனுப்பப்பட்டதாக ப்ரோமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'லியோ' வெற்றி விழா முடிந்ததும் தாய்லாந்து பறந்த விஜய்.. மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

நள்ளிரவில் திடீரென மருத்துவமனை சென்ற விஜய்.. யாருக்கு என்ன ஆச்சு?

தளபதி விஜய் நள்ளிரவில் திடீரென மருத்துவமனை சென்றதாக ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்கள் நோக்கம் முழுமை அடைந்தது.. தமிழக முதல்வருக்கு நன்றி சொன்ன சூர்யா..!

எங்கள் படைப்பின் நோக்கம் முழுமை அடைந்தது என்றும் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி என்றும் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.