ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு? கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பு..!

  • IndiaGlitz, [Thursday,May 16 2024]

நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் சென்று வருகிறார் என்பது பலர் அறிந்தது. அந்த வகையில் இந்த ஆண்டும் அவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றபோது அவரது கையில் கட்டு இருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஐஸ்வர்யா ராய் இல்லாத கேன்ஸ் திரைப்படவிழாவே இல்லை என்று கூறப்படும் நிலையில் அவருக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிவப்பு கம்பளம் மரியாதை அளிக்கப்படும் என்பதும் குறிப்பாக அவர் கேன்ஸ் விழாவில் அணிந்து வரும் ஆடை உலக அளவில் பிரபலம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்னரும், குழந்தை பெண்ணாக குழந்தை பிறந்த பின்னரும் அவர் தொடர்ச்சியாக கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்று வருகிறார் என்பதும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக தனது மகளையும் அவர் அழைத்து சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்வதற்காக ஐஸ்வர்யா ராய் மும்பை விமான நிலையத்தில் வந்த போது அவரது கையில் கட்டு இருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விமான நிலையத்தில் நடந்து சென்ற போது உங்கள் கைக்கு என்ன ஆச்சு? கையை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியதோடு அவரது மகளிடமும் அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். ஆனால் ரசிகர்களுடைய கேள்விக்கும் பதில் சொல்லாமல் ஐஸ்வர்யா தனது மகளுடன் விமானத்தை பிடிப்பதற்காக சென்று விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் கையில் கட்டு போட்டதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை என்றாலும் விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சீரியலில் மாமியார் - மருமகள்.. நிஜத்திலும் மாமியார் - மருமகள் ஆகும் ஆச்சரியம்..!

சீரியலில் மாமியார் மருமகள் கேரக்டரில் நடித்து கொண்டிருக்கும் இரண்டு நடிகைகள் நிஜமாகவே மாமியார் மருமகள் ஆகப்போகும் ஆச்சரியம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

அவரை போல் இன்னொருவர் இந்த உலகத்தில் தோன்ற முடியாது: ரஜினிகாந்த் வீடியோ வரைல்..!

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது என்பதும் டெல்லி சென்று அந்த விருதை அவருடைய மனைவி பிரேமலதா பெற்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பிய ரஜினிகாந்த்.. எந்த நாடு? என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பி இருப்பதாகவும் அவர் எந்த நாட்டுக்கு சென்றார்? என்ன காரணத்துக்காக செல்கிறார்? என்ற விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு எந்த குளறுபடிகளும் இருக்க கூடாது.. ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு..!

கடந்த ஆண்டு தளபதி விஜய் கல்வி விருது விழா நடத்தி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கினார்

மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி.. சசிகுமாருக்கு ஒரு சக்சஸ் திரைப்படம் பார்சல்..!

கடந்த ஆண்டு சசிகுமார் நடித்த சூப்பர் ஹிட் படம் வெளியான நிலையில் அதே பட இயக்குனருடன் மீண்டும் சசிக்குமார் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு