பிரபல கவிஞர் எழுதிய கதையில் நடிகை ஐஸ்வர்யா ராய்… வைரல் தகவல்!

  • IndiaGlitz, [Saturday,December 18 2021]

பாலிவுட் சினிமாவில் உருவாக இருக்கும் 3 ஹீரோயின்களை மையப்படுத்திய திரைப்படம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தின் கதை தேசிய கீதம் பாடிய பிரபல கவிஞர் ரவீந்திரநாத் தாகூருடையது என்பதும் சிறப்புக்குரியதாகக் பார்க்கப்படுகிறது.

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் கடந்த 1997 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “இருவர்“ எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்குப் பிறகு ஒருசில தென்னிந்திய திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் பாலிவுட் சினிமாவே அருடைய களமாக இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “எந்திரன்“ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படைப்பான “பொன்னியின் செல்வன்“ திரைப்படத்தில் இணைந்து லீட் ரோலான நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2 பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல்பாகம் அடுத்த வருடம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் பாலிவுட்டில் 3 ஹீரோயின்களை மையப்படுத்திய கதை ஒன்று திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் இஷிதா கங்குலி என்பவர் இயக்கவுள்ள இந்தக் கதையின் ஒரு ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மறைந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் “3 வுமன்“ எனும் கதையை எழுதியிருந்தார். இந்தக் கதையைத் தழுவித்தான் தற்போது பாலிவுட்டின் புது திரைப்படம் உருவாக இருக்கிறது. அதில் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

திருமணம் முடிந்த கையோடு கணவனுக்காக அல்வா செய்த பிரபல நடிகை!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வரும்வரும் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌஷால் இவர்களது திருமணம்

மக்கள் ஜாதகத்தையே மாத்தி எழுதியிருவாங்க: பிக்பாஸ் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 76வது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய முதல் புரோமோவில் கமல் தோன்றும் காட்சியின் புரோமோ விடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சோகத்திலும் சக வீரர்களிடம் சேட்டை செய்து விளையாடிய கேப்டன்… வைரல் புகைப்படம்!

3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள் தென்ஆப்பிரிக்கா

உயிரைக் காப்பாற்றிய டிராபிக் போலீஸ்க்கு நன்றி தெரிவித்த சச்சின்…நடந்தது என்ன?

இந்தியக் கிரிக்கெட்டில் ஜாம்பவனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்,

ஒரே ஷாட்டில் 5 நிமிட காட்சிகள்: 'மாநாடு' சிம்புவின் அசத்தல் வீடியோ!

 'மாநாடு'  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது