இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கி. ஏர்டெல் தொடங்கியுள்ளது

  • IndiaGlitz, [Thursday,November 24 2016]

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகிய ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கி சேவையை நேற்று முதல் ராஜஸ்தானில் சோதனை வடிவில் தொடங்கியுள்ளது. இந்த வங்கிக்கு கிடைக்கும் ஆதரவை பொருத்து இந்தியா முழுவதிலும் இந்த சேவையை விரிவு படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே ஏர்டெல் மணி, மற்றும் ஏர்டெல் வாலட் ஆகிய சேவையை வழங்கி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சேவையாக இந்த பேமெண்ட் வங்கி சேவையை தொடங்கியுள்ளது. ஏர்டெல் உள்பட 11 தனியார் நிறுவனங்களுக்கு இந்த வங்கிக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியிருந்தாலும் ஏர்டெல் முதன்முதலில் இந்த சேவையை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
இதன்படி இனிமேல் ஏர்டெல் ஸ்டோர்கள் மூலம் வங்கிக்கணக்குகளை துவக்க முடியும். இந்தியாவில் உள்ள 10.5 லட்சம் ஏர்டெல் ஸ்டோர்கள் இனி வங்கி சேவை மையங்களாக செயல்படும்.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஏர்டெல் மொபைல் எண்களையே வங்கிக்கணக்கு எண்களாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சேவை மொபைல் ஆப், யு.எஸ்,எஸ்.டி , ஐவிஆர் முறையில் செயல்படும். அதுமட்டுமின்றி ஏர்டெல் பேமண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1லட்சம் விபத்து காப்பீடு செய்யப்படும் என்றும் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும் என்றும் ஏர்டெல் பேமண்ட வங்கி சேவையின் தலைமை செயல் அதிகாரி சாஷி அரோரா கூறியுள்ளார்.

More News

ரஜினி-விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோர் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருந்தபோதிலும் அவர்களுடைய பாடல்களுக்கு யூடியூபில் கிடைத்த பார்வையாளர்களைவிட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர்களின் பாடல்களுக்கு அதிக பார்வையாளர்கள் வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்

விஷ்ணுவுடன் முதன்முறையாக இணையும் அமலாபால்

இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்து குறித்த அறிவிப்பை சமீபத்தில் அறிவித்த நடிகை அமலாபால், தற்போது கோலிவுட்டில் அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

ஏ.டி.எம்-இல் பணம் நிரப்ப சென்ற வேன் திடீர் மாயம். ரூ.1.37 கோடி எங்கே?

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து அனைத்து ஏ.டி.எம்.களிலும் ரூபாய் நோட்டு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதன் காரணமாக இரவுபகலாக இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் பணம் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

'கிக்' பட சர்ச்சை. லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கனவே ரஜினிமுருகன்' படத்தில் இடம்பெற்ற 'என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா' பாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'கிக்' என்ற 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் இடம்பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நி&#

விஜய்யின் அணுகுமுறையை ரஜினியிடம் எதிர்பார்த்தேன் : அமீர்

பிரதமர் நரேந்திரமோடி கருப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிப்பதற்காக சமீபத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கையான ரூ.500, ரூ.1000...