ஜனவரியில் நயன்தாரா ரசிகர்களுக்கு முப்பெரும் விருந்து

  • IndiaGlitz, [Wednesday,January 02 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஆண்டு நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் இந்த ஆண்டும் அவருடைய வெற்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அஜித்துடன் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்', திரைப்படம் ஜனவரி 10ல் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் 'கொலையுதிர்க்காலம் திரைப்படமும் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 5ஆம் தேதி நயன்தாரா நடித்த 'ஐரா' படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஜனவரி மாதம் ஐரா டீசர், 'விஸ்வாசம்' ரிலீஸ், 'கொலையுதிர்க்காலம்' ரிலீஸ் என அவரது ரசிகர்களுக்கு முப்பெரும் விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நயன்தாரா 'சயிரா நரசிம்மரெட்டி, சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் படம் ஆகியவைகளும் இந்த ஆண்டில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஐரா' படத்தை இயக்குனர் சர்ஜூன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'லட்சுமி', 'மா' ஆகிய குறும்படங்களையும் சத்யராஜ், வரலட்சுமி நடித்த 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

பிரபாஸ்-அனுஷ்கா கைகோர்த்து நடனம்: வைரலாகும் வீடியோ

இந்திய சினிமாவை உலக அளவுக்கு கொண்டு சென்ற இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் மகன் கார்த்திகேயாவின் திருமணம் நேற்று ஜெய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது

நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டி: பிரபல தமிழ் நடிகர் அறிவிப்பு

தமிழ் திரையுலகில் இருந்து ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் அரசியலில் குதித்துள்ளனர்.

'அடங்கமறு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய 'அடங்கமறு' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் திருவிழா படங்களில் ஒன்றாக பெரும் போட்டிகளுக்கு இடையே வெளிவந்து வெற்றி பெற்றது.

'சூர்யா 37' டைட்டிலில் ஆச்சரியம்

சூர்யா நடித்து வரும் 'சூர்யாவின் 37வது படத்தின் டைட்டில் இன்று அதிகாலை புத்தாண்டு பிறந்த பத்து நிமிடத்தில் அதாவது 12.10 மணிக்கு வெளியாகும் என வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

கவுசல்யாவின் கணவர் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்கள்: அதிர்ச்சி தகவல்

உடுமலையில் நடந்த ஆணவக்கொலையில் கணவர் சங்கரை பறிகொடுத்த கவுசல்யா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சக்தி என்ற பறை இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஒரு புரட்சிகரமான திருமணமாக கருதப்பட்டது.