அதிமுக பொதுக்குழு கூடும் இடம்-தேதி குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Friday,December 23 2016]

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவர் வகித்து வந்த முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வகித்து வருகிறார். இந்நிலையில் ஜெயலலிதாவின் இன்னொரு பதவியான அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவது யார்? என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வரும் 29ஆம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட உள்ளதாகவும், அன்றைய தினம் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதி செய்யும் வகையில் இன்று மாலை ஆறு மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கவிருக்கிறது.

இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா அவர்களை தேர்ந்தெடுப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்ற, அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவை எப்போது, எங்கே கூட்டுவது என்று முடிவெடுக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுக்குழு கூட்டத்தற்கான அழைப்பிதழ்கள் வெகு விரையில் அதிமுக கட்சி நிர்வாகிகள், செயலாளர்கள், முக்கிய உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்படும் என்றும் விரைவில் அதிமுக பொதுக் குழு மற்றும் செயற்குழு கூடும் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.