அகஸ்தியா திரையரங்கை நயன்தாரா வாங்கியது உண்மையா? தியேட்டர் நிர்வாகம் விளக்கம்..!

  • IndiaGlitz, [Wednesday,May 24 2023]

வட சென்னையில் உள்ள அகஸ்தியா என்ற பழமையான திரையரங்கை நடிகை நயன்தாரா வாங்கி விட்டதாகவும் அதில் அவர் மல்டிபிளக்ஸ் கட்டப் போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்த விளக்கத்தை அகஸ்தியா தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது

சென்னையின் அடையாளங்களில் ஒன்று அகஸ்தியா திரையரங்கம் என்பதும் கடந்த 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் 1000 பேர் வரை இந்த திரையரங்கில் படம் பார்க்கலாம் என்பதும் இந்த திரையரங்கம் கடும் நெருக்கடியை சந்தித்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் போது மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அகஸ்தியா திரையரங்கை நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் வாங்கி விட்டதாகவும் அந்த இடத்தில் மல்டிபிளக்ஸ் கட்ட இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அகஸ்தியா திரையரங்க நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் அகஸ்தியா திரையரங்கம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் தான் இயங்கி வருவதால் அதை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. எனவே இந்த திரையரங்கை நடிகை நயன்தாரா வாங்கிவிட்டார் என்ற செய்தியில் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

More News

பிரபல நடிகை கார் விபத்தில் மரணம்.. வருங்கால கணவருடன் சென்றபோது ஏற்பட்ட சோகம்..!

பிரபல நடிகை ஒருவர் தனது வருங்கால கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து காரணமாக காலமானார்

ரூ.15 லட்சம் மதிப்புள்ள பைக் பரிசு கொடுத்த அஜித்.. யாருக்கு தெரியுமா?

நடிகர் அஜித் தன்னுடன் பைக் ரைடு செய்தவருக்கு 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? நடிகை ஹன்சிகாவின் கோபமான பதிவு..!

நடிகை ஹன்சிகாவுக்கு பிரபல நடிகர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான செய்திக்கு அவர் கோபமாக தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

எருமை சாணி விஜய் திருமணம்.. மணமகளுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்கள்..!

எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணம் இன்று நடந்துள்ளது.

தீபிகாவும் இல்லை, கீர்த்தி சுரேஷூம் இல்லை.. 'STR 48' படத்தில் இவர்தான் நாயகி..!

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'STR 48' என்ற படத்தில் தீபிகா படுகோனே அல்லது கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பார்