உலகக்கோப்பை ஜெயித்தவுடன் 3 ஜாம்பவான்கள் ஓய்வு அறிவிப்பு.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Sunday,June 30 2024]

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் 3 ஜாம்பவான் வீரர்கள் தங்களது ஓய்வு முடிவை அறிவித்துள்ளதை அடுத்த கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நடந்த நிலையில் அதில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் விராட் கோஹ்லியின் 76 ரன்கள், ஹர்திக் பாண்ட்யாவின் மூன்று அருமையான விக்கெட் மற்றும் சூரியகுமார் யாதவ் அசத்தலான கேட்ச் ஆகியவை இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணங்கள் ஆகும்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் பிரதமர் மோடி இந்திய கிரிக்கெட் அணி வீரர்களிடம் தொலைபேசியில் பேசி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற நிலையில் மூன்று ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோஹ்லி மற்றும் ஜடேஜா ஆகிய மூவருமே தங்கள் ஓய்வை அடுத்தடுத்து அறிவித்துள்ளனர். டி20 கிரிக்கெட் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கண்ட மூவரும் அறிவித்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலையில் விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா தங்களது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் சற்றுமுன் ஜடேஜாவும் தனது ஓய்வு முடிவை இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறிய நினைவில் ஓய்வு பெறுகிறேன், இருப்பினும் டெஸ்ட் மட்டும் ஒருநாள் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன், நீங்கள் அளித்த வந்த ஆதரவுக்கு தனது நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

More News

எனக்கு செண்டிமெண்ட் கிடையாது.. ராகு காலத்தில் படம் ஆரம்பித்து காட்டுகிறேன்.. விஜய் ஆண்டனி

எனக்கு ராகு காலம், எமகண்டம் சென்டிமென்ட் எல்லாம் கிடையாது என்றும், நீங்கள் எந்த டைம் கொடுத்தாலும் அந்த டைமில் நான் படம் ஆரம்பித்து காட்டுகிறேன் என்றும், 'மழை பிடிக்காத மனிதன்'

கன்னத்தோடு கன்னம் ஒட்டிய போட்டோஷூட்.. மஞ்சிமாவை விட கொள்ளை அழகு.. கௌதம் கார்த்திக்கின் புதிய லுக்..!

நடிகர் கௌதம் கார்த்திக் தனது மனைவி மஞ்சிமா உடன் எடுத்துள்ள புதிய போட்டோஷூட்  புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புதிய கெட்டப் மஞ்சிமாவை

போயஸ் தோட்டத்தில் புது வீடு.. நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை நயன்தாரா போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த வீட்டின் முன் எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருப்பதை

ஆர்யாவின் ஆணழகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. விரைவில் சூப்பர் அறிவிப்பு..!

ஆர்யா நடித்து வந்த 'மிஸ்டர் எக்ஸ்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை எடுத்து

கவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? மீண்டும் ஒரு வெற்றி படமா?

கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.