close
Choose your channels

விஜய்யை அடுத்து நடிப்புக்கு பிரேக் கொடுக்கும் முன்னணி நடிகை.. இதுதான் காரணமா?

Wednesday, July 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ’தளபதி 68’ படத்தை முடித்தவுடன் மூன்று ஆண்டுகள் நடிப்புக்கு பிரேக் எடுக்க இருப்பதாகவும் அவர் அரசியல் களப்பணிகளில் இறங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யை அடுத்து நடிகை சமந்தாவும் கிட்டத்தட்ட ஒரு வருடம் திரையுலகிற்கு பிரேக் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி’ என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அவர் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் சமந்தா நடித்து வரும் நிலையில் அந்த தொடரிலும் தனது பகுதியின் படப்பிடிப்பை அவர் முடித்துவிட்டார். இந்த நிலையில் ’குஷி’ மற்றும் ‘சிட்டாடல்’ ஆகியவற்றுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் திரையுலகில் இருந்து பிரேக் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த நிலையில் அந்த படத்திற்காக வாங்கிய முன்பணத்தை அவர் திருப்பி கொடுத்து விட்டதாகவும் தற்போது அவர் தனது உடல் நிலையை கவனிப்பதற்காகவும் கூடுதல் சிகிச்சை பெறவும் கிட்டத்தட்ட ஒரு வருடம் பிரேக் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment