வெங்கட்பிரபுவின் ட்வீட்.. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அஜித் ரசிகர்கள் கோரிக்கை..!

  • IndiaGlitz, [Saturday,April 27 2024]

அஜித் நடித்த ’மங்காத்தா’ திரைப்படம் ரீரிலீஸ் குறித்த தகவலை வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் உடனே சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி அவர் நடித்த ’பில்லா’ மற்றும் ’தீனா’ ஆகிய படங்கள் ரிலீசாக இருப்பதாக கூறப்படும் நிலையில் ’மங்காத்தா’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என ஏராளமான அஜித் ரசிகர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்று தனது சமூக வலைதள பக்கத்தில் ’மங்காத்தா’ திரைப்படத்தை திரையிட ஏகப்பட்ட கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் ’மங்காத்தா’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளை செய்கிறோம். ஆனால் அந்த படத்தின் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் உள்ளது, அந்நிறுவனம் மனது வைத்தால் மட்டுமே முடியும்’ என்று பதிவு செய்துள்ளார்.

உடனே அஜித் ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ’மங்காத்தா’ படத்தை மே 1ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிப்பை வெளியிடுங்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறோம் என்று பதிவு செய்து வருகின்றனர். எனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’மங்காத்தா’ ரிலீஸ் குறித்து அறிவிப்பை வெளியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஏணி போட்டு தான் ஏறனும்.. தங்கையின் போட்டோஷூட் புகைப்படங்களை கலாய்த்த அக்கா நடிகை..!

நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை அவரது சகோதரி ஜான்வி கபூர் கலாய்த்து போட்ட கமெண்ட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'அரண்மனை 4' படத்திற்காக இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்தாரா தமன்னா?  டூப் இல்லாமல் செய்த ஸ்டண்ட்கள்..!

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் உருவான 'அரண்மனை 4' திரைப்படம் வரும் மே 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

6 புதிய கோமாளிகளுடன் கோலாகலமாக ஆரம்பித்த குக் வித் கோமாளி.. முதல் எபிசோட் எப்படி இருக்கு?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் இன்று ஐந்தாவது சீசனின் முதல் எபிசோட் வெளியாகியுள்ள நிலையில் இந்த எபிசோடு

உண்மைச் சம்பவத்தின்  பின்னணியில் உருவாகும் 'ராபர்' .. சிவகார்த்திகேயன் வெளியிட்ட போஸ்டர்..!

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின்  பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார்.

இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்; விநாயகரை வழிபட சங்கடம் தீரும் (சித்திரை 14, ஏப்ரல் 27)

சென்னை, ஏப்ரல் 27: இன்று சித்திரை மாதம் 14 ஆம் தேதி, சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நாளில் விநாயகரை வழிபட்டால், சகல துன்பங்களும் நீங்கி, மன நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம்.