'துணிவு' படத்தை அடுத்து 'வாரிசு' படத்தையும் வாங்கிய ரெட் ஜெயண்ட்: என்ன நடக்கும்?

  • IndiaGlitz, [Tuesday,November 22 2022]

வரும் பொங்கல் திருநாளில் அஜித் நடித்த 'துணிவு’ மற்றும் விஜய் நடித்த 'வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசாக இருக்கும் நிலையில் 'துணிவு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் ஒரு சில ஏரியாக்களின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை செவன் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் பெற்றுள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவின் ரிலீஸ் உரிமையை மட்டும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனை அடுத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் 'துணிவு’ மற்றும் ’வாரிசு’ ஆகிய இரண்டு படங்களையுமே ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்வதால் திரையரங்குகளை எப்படி பிரித்து ரிலீஸ் செய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் 'துணிவு’, ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் இருதரப்பு ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இந்த படங்களை பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.