10 வருடங்களுக்கு பின் உருவாகும் 2ஆம் பாகம்:  அஜித், விஜய் இயக்குனரின் அடுத்த படம்..!

  • IndiaGlitz, [Friday,January 12 2024]

அஜித், விஜய் படங்களின் இயக்குனர் இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 10 வருடங்களுக்கு பின் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த ’ராஜா’ விஜய் நடித்த ’துள்ளாத மனமும் துள்ளும்’ உட்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் எழில். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ’யுத்த சத்தம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு விமல் நடித்த ’தேசிங்கு ராஜா’ என்ற திரைப்படத்தை எழில் இயக்கிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது அவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விமல் 2ஆம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகைகளான பூஜிதா பொனாடா மற்றும் ஹர்ஷிதா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க உள்ளதாக தெரிகிறது.

கல்லூரியில் படிக்கும் நான்கு நெருங்கிய நண்பர்கள் படிப்பு முடித்தவுடன் வெவ்வேறு பாதையில் செல்கின்றனர். மீண்டும் அவர்கள் சந்திக்கும் போது அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை காமெடியாக கூறுவது தான் இந்த படத்தின் கதை என்று தெரிகிறது.

More News

திடீரென மொட்டை அடித்த அஜித், விஜய் பட நடிகை.. என்ன காரணம்?

அஜித் ,விஜய் உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த  நடிகை திடீரென மொட்டை அடித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இரட்டையர்கள் இயக்கத்தில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898' ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக மணிரத்னம்

'அவன் போன ஜென்மத்தில இருந்தே பைத்தியம்” சந்தானம் நடித்த 'வடக்குப்பட்டி ராமசாமி' டிரைலர்..!

 சந்தானம் நடித்து முடித்துள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல்

என்ன ஆச்சு மணி - ரவீனா ரிலேஷன்ஷிப்? திடீர் பிரச்சனைக்கு என்ன காரணம்?

இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்து மணி மற்றும் ரவீனா நெருக்கமாக இருந்தனர் என்பதும் இந்த சீசனின் காதல் ஜோடி என்றும் பார்வையாளர்களால் விமர்சனம் செய்யப்பட்டனர் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து

கேமராமேன் செம்ம டேலண்ட்.. மாயா சொன்னதை எப்படி காண்பித்துள்ளார் பாருங்கள்..!

ஒரு ஹீரோ எப்படி இருக்க வேண்டும் என்று மாயா கூறிய போது கேமராமேன் மிகவும் புத்திசாலித்தனமாக அர்ச்சனா பெயர் உள்ள இடத்தை காட்டியது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.