close
Choose your channels

10 வருடங்களுக்கு பின் உருவாகும் 2ஆம் பாகம்:  அஜித், விஜய் இயக்குனரின் அடுத்த படம்..!

Friday, January 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய் படங்களின் இயக்குனர் இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 10 வருடங்களுக்கு பின் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த ’ராஜா’ விஜய் நடித்த ’துள்ளாத மனமும் துள்ளும்’ உட்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் எழில். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ’யுத்த சத்தம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்

இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு விமல் நடித்த ’தேசிங்கு ராஜா’ என்ற திரைப்படத்தை எழில் இயக்கிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது அவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விமல் 2ஆம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகைகளான பூஜிதா பொனாடா மற்றும் ஹர்ஷிதா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க உள்ளதாக தெரிகிறது.

கல்லூரியில் படிக்கும் நான்கு நெருங்கிய நண்பர்கள் படிப்பு முடித்தவுடன் வெவ்வேறு பாதையில் செல்கின்றனர். மீண்டும் அவர்கள் சந்திக்கும் போது அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை காமெடியாக கூறுவது தான் இந்த படத்தின் கதை என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment