சூர்யாவை அடுத்து வெப்தொடரில் நடிக்கும் பிரபல ஹீரோ: டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,January 29 2021]

திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் தற்போது வெப்தொடர் பக்கம் திரும்பி உள்ளனர் என்பதும் அதேபோல் வெற்றிமாறன், கெளதம் மேனன், மணிரத்னம் உள்பட பல முன்னணி இயக்குனர்களும் தற்போது வெப்தொடர்களில் பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

குறிப்பாக மணிரத்னம் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்திற்காக உருவாகி வருகிறது என்பதும் விரைவில் இந்த ஆந்தாலஜி திரைப்படம் ரிலீஸாகும் என்பதும் குறிப்பிடதக்கது

இந்த நிலையில் சூர்யாவை அடுத்து சரத்குமாரும் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சரத்குமார் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு இணைந்து நடிக்கும் இந்த வெப் தொடருக்கு ‘கார்ஷானா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கஸ்தூரி உள்பட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த தொடர் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிகிறது. தெலுங்கில் இந்த வெப்தொடர் தயாரானாலும் தமிழிலும் இந்தப் வெப்தொடர் டப்பிங் செய்து ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

சூர்யாவை அடுத்து சரத்குமாரும் வெப்தொடரில் நடிக்க இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தியை அடுத்து இன்னும் யார் யாரெல்லாம் வெப்தொடருக்கு வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

கமல்ஹாசனிடம் சொன்னதை செய்த ரியோ: வைரல் வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கமல்ஹாசனிடம் கூறிய ஒரு வாக்குறுதியை ரியோ ராஜ் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்ததும் நிறைவேற்றியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது

தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மூதாட்டி… உயிரோடு இருந்ததால் அதிர்ந்துபோன உறவினர்கள்!

அர்ஜெண்டினாவில் மூதாட்டி ஒருவர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

விஜய்க்கு நெருக்கடி தருவது யார்? எஸ்.ஏ.சந்திரசேகர் பிரத்யேக பேட்டி!

விஜய்க்கு நெருக்கடி தருவது யார்? என எஸ் ஏ சந்திரசேகர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

உருக்கமான வேண்டுகோளுடன் 'மாநாடு' அப்டேட் தந்த சிம்பு!

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டமாக நடைபெற்று வருகிறது.

யாக்கர் மன்னனுக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அறிவுரை… என்ன சொன்னார் தெரியுமா?

அறிமுக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது உலகத்தின் பல ஜாம்பவான்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.