close
Choose your channels

சூர்யாவை அடுத்து ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு கார்த்தி கண்டனம்!

Saturday, July 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய ஒளிப்பதிவு வரைவு சட்டத்திற்கு திரையுலகினர் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல... என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூர்யாவை அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்தத்திற்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவை அடுத்து அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தியும், புதிய ஒளிப்பதிவு சட்ட வரைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ஒரு படத்தின் தணிக்கை சான்றிதழை எந்த நேரத்திலும் ரத்து செய்ய மத்திய அரசு அனுமதிக்கும் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா வணிக வாய்ப்புகளையும் தொழில் துறையும் கடுமையாக பாதிக்கும். மேலும் திருட்டுத்தனத்தை தடுப்பதற்கான நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றாலும் நாகரீக சமூகத்தில் கருத்து சுதந்திரத்தை நெறிப்பது விரும்பத்தகாத ஒன்று’ என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கார்த்தியின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment