'சர்தார்' வெற்றியை அடுத்து படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு.. கார்த்தி ரசிகர்கள் குஷி!

தீபாவளி விருந்தாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான ’சர்தார்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ’பொன்னியின் செல்வன்’ படத்தை அடுத்து கார்த்திக்கு மேலும் ஒரு வெற்றி படமாக ’சர்தார்’ படம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சென்னையில் ’சர்தார்’ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் பிஎஸ் மித்ரன், நடிகர் கார்த்திக் உள்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே முதல் பாகத்தில் ’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான லீட் உள்ளதால் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பு உறுதியாகியுள்ளது. ’சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கார்த்தி நடித்த ’கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2ஆம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கார்த்தியின் ’சர்தார்’ படமும் இரண்டாம் பாகம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.

More News

ரோமியோ பிச்சர்ஸ் மற்றும் பிளாக் ஷீப்.. கலக்க வரும் புதிய கூட்டணி! 

ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பிளாக் ஷீப் ஊடக குழுவினரும் இணைந்து ஒரு புதிய படத்தை கருவாக்கி உருவாக்க இருக்கிறார்கள்.

போடறதுன்னு ஆயிப்போச்சு, கைகால்ல போடாம கழுத்துல போடு.. 'இடம் பொருள் ஏவல்' டிரைலர்

விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் 'இடம் பொருள் ஏவல்'. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி நீண்ட காலமாகியும் ஒரு சில பிரச்சனை

ஆயிஷாவை திடீரென தூக்கி கொண்டு ஓடிய அசீம்.. பிக்பாஸ் வீட்டில் என்ன ஆச்சு?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷா திடீரென மயங்கி விழுந்ததாகவும் அவரை அசீம் தூக்கிக் கொண்டு மருத்துவ அறைக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எல்லா பெண்களிடமும் கடலை போட்ட அசல்.. கடைசியில் சிக்கிய சிங்கப்பூர் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பிரபலமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோலார் ஒரே வாரத்தில் பிரபலமாகிவிட்டார்.

என்னை மாதிரி கெட்டவ உலகத்துல யாரும் கிடையாது: ஜனனி ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளவும் மற்ற போட்டியாளர்களை கவிழ்க்கவும் செய்யும் முயற்சிகள் .