சிம்பு திருமணம் செய்த பின்னர் தான் எனக்கு திருமணம்.. விஜய் டிவி சீரியல் நடிகை அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,June 17 2024]

நடிகர் சிம்பு 41 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நிலையில் சிம்பு திருமணம் செய்த பின்னர் தான் எனக்கு திருமணம் என விஜய் டிவி சீரியல் நடிகை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் 40 வயதுக்கு மேல் திருமணம் செய்யாமல் இருக்கும் நடிகர்கள் சிலர் இருக்கின்றனர் என்பதும் குறிப்பாக சிம்பு, விஷால், பிரேம்ஜி உள்பட ஒரு சிலர் இருக்கும் நிலையில் பிரேம்ஜிக்கு சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சிம்புவுக்கு தகுந்த பெண் பார்ப்பதாக அவருடைய பெற்றோர் பல ஆண்டுகளாக கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கேற்ற பெண் இன்னும் கிடைக்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டுக்குள் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்புவின் தீவிர ரசிகான நடிகை ரேமா அசோக் என்பவர் ’சிம்பு திருமணம் செய்த பின்னர் தான் தனக்கு திருமணம்' என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் சிம்புவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’சிம்புவுக்கு நான் மட்டுமல்ல, எனது குடும்பமே ரசிகர்கள் என்றும் அவரை எங்களுக்கு அப்படி பிடிக்கும், என்று அவர் பெருமையுடன் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சிம்புவுக்கு திருமணம் ஆன பின்னர் தான் எனக்கு திருமணம் என்று அவர் கூறியுள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கல்யாணம் முதல் காதல் வரை’ ’நாச்சியார்புரம்’ ’சின்னத்தம்பி’ போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.